Sunday, January 14, 2007

பொங்கச் செய்வோம்....



பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொலவதிலோர் மகிமை இல்லை;
திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.

உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
வாக்கினிலே ஒளியுண்டாகும்
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
கவிப்பெருக்கும் மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
விழிபெற்று பதவி கொள்வார்;
தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
இங்கமரர் சிறப்புக் கண்டார்

- மகாகவி பாரதியார்


பொங்கல் நல்வாழ்த்துக்கள்....தமிழினமே.!....

2 Comments:

மங்கை said...

இதயம் கனிந்த பொங்கல்
தின வாழ்த்துக்கள்.

பங்காளி... said...

நன்றி மங்கை,....

இனி வரும் நாட்கள் இனிதாய் மலர பொங்கல் திருநாளில் வாழ்த்துகிறேன்....