Thursday, November 30, 2006

அப்பாவின் அறுவைசிகிச்சை...

இப்பதிவினை சென்னையின் புகழ்பெற்ற மருத்துவமனையொன்றின் அறையிலிருந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். கடந்த ஐந்து நாட்களாய் இங்கேதான் வாசம்.....

மதுரையிலிருந்து, கடந்த 22ம் தேதி இரவு அப்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் உடனே வரவேண்டி தகவல்.......கலவரமாய் அடுத்தநாள் காலை 7மணிக்கு பாரமவுண்டில் பறந்தேன்...எவ்வளவோ முயன்றும் குட்டைபாவாடை பணிப்பெண்களை ரசிக்கிற மனநிலை இல்லாமல் மதுரையில் இறங்கினேன்.

அதற்குள் மலேரியா என தீர்மாணித்து அதற்கான சிகிச்சைகள் ஆரம்பித்திருந்தனர்.....இரண்டு நாட்களுக்கு பின்னரும் எந்த முன்னேற்றமுமில்லாமல்....டெங்குவாய் இருக்குமென ஹேஷ்யங்கள்....அப்பா என் கண் முன்னே கொஞ்சம் கொஞ்சமாய் நினைவிழக்கத் துவங்கியிருந்தார்....இனி இவர்களை நம்பி பயனில்லை என முடிவு செய்து உடனடியாய் விமானத்தில் சென்னைக்கு கொண்டுவந்தேன்....

சென்னை வந்த ஒரு மணி நேரத்தில் அவருக்கு பித்தப்பையில் இரண்டு பெரிய கல் இருப்பது கண்டறியப்பட்டது.உடனடியாய் அறுவைசிகிச்சை செய்தால் மட்டுமே உயிர் பிழைக்க வாய்ப்பிருப்பதாய் சொன்னவர்கள்,இதயம் அறுவை சிகிச்சையை தாங்குமா என்கிற சந்தேகத்தை எழுப்பி என்னை தடுமாற வைத்தனர்.

ஜீரண மண்டலங்களுக்கு மட்டுமே சிறப்பு சிகிச்சைதரும் இம்மருத்துவமனையில் சேர்த்து இரண்டு நாட்களுக்கு அவர்களால் எதுவும் செய்ய என் தந்தையின் உடல்நிலை இடம் தரவில்லை.இரண்டு நாள் மரணப்போராட்டத்திற்குப் பின்னர் நேற்று இரவு என் தந்தையாருக்கு அவரது பித்தப்பையும்(Gal bladder), கற்களும் அகற்றப்பட்டு தற்சமயம் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கிறார்.

கடந்தவாரம் வரை எனக்கு நமது ஜீரணமண்டலம் பற்றிய பெரிதாய் ஆர்வமோ,அறிவோ கிடையாது.ஆனால் இந்த நிகழ்வுகளுக்குப் பின்னர் நானறிந்த சில விடயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்....

உணவுக்குழாயில் துவங்கி இரைப்பை, சிறுகுடல்,பெருங்குடல்,கல்லீரல்(Liver),கனையம்(Pancreas)முதலிய உறுப்புகள் அடங்கிய பகுதியைத்தான் ஜீரணமண்டலம் என்கிறோம். இந்த உறுப்புகள் சுரக்கும் ஜீரண நொதிகள்(ENZYMES),அமிலம்(Acid),பித்த நீர்(Bile),முதலியன நாம் உண்ணும் உணவின் செரிமானத்திற்கு உதவுகிறது.

இந்த ஜீரண மண்டலத்தை தாக்கும் வியாதிகளாவன...நெஞ்செரிச்சல்(Esophagitis), அதிக அமிலம் சுரத்தல், அஜீரணம், குடல்புண், பித்தபை கற்கள், மஞ்சள் காமாலை, கல்லீரல் வீக்கம்(Hepatities),கல்லீரல் சுருக்கம்(Cirrhosis), இரத்த வாந்தி போன்ற கல்லீரல் வியாதிகள், கனைய வியாதிகள், ஜீரணமண்டல புற்று நோய்கள், மூலவியாதி, ஆசன வாய் வெடிப்பு(Anal Fissure).

வயிற்றுவலி, வாந்தி,நெஞ்செரிச்சல், பசியின்மை,வாயுத்தொல்லை,மலச்சிக்கல்,வயிற்றுப்போக்கு, எடைகுறைவு,மஞ்சள்காமாலை,விழுங்குவதில் சிரமம்,வயிறு மற்றும் கால்வீக்கம், வாந்தி மலத்தில் ரத்தம் வெளியேறுதல் முதலியன ஜீரணமண்டல வியாதிகளின் அபாய அறிகுறிகள்....
எனவே...இப்பதிவினை கடந்து செல்லும் நணபர்கள் ஜீரணமண்டலம் பற்றிய விழிப்புணர்வு அடைந்து நலமுடம் வாழ வாழ்த்துகிறேன்.

Thursday, November 23, 2006

பகவான் சத்யசாய் பாபா


There is only one religion, the religion of Love;
There is only one language, the language of the Heart;
There is only one caste, the caste of Humanity;
There is only one law, the law of Karma;
There is only one God, He is Omnipresent.
You cannot see Me, but I am the Light you see by.You cannot hear Me, but I am the Sound you hear by.You cannot know Me, but I am the Truth by which you live.

இன்று பகவான் சத்யசாய் பாபாவின் பிறந்ததினம்....
Love All Serve All...Love Ever Hurt Never....

Monday, November 20, 2006

நான் ஏன் கலந்துகொள்ளவில்லை

ஒரு வழியாக சென்னை வலைபதிவர்களின் கூட்டம் இனிதே நடந்தேறியிருக்கிறது.சைக்கிள் கேப்பில் சிக்ஸர் அடித்து இட்லிவடை ஹீ(ஜீ)ரோவாகிவிட்டார்.இப்படி இவர்களெல்லாம் சந்தோசமாய் கும்மியடித்துக் கொண்டிருந்த வேளையில் நான் எனது ஆடிட்டர் அலுவலகத்தில் தலையை சொறிந்து கொண்டு உட்கார்ந்திருந்தேன்.நவம்பர்31 க்குள் FBT(Fringe Benifit Tax) கட்டியாக வேண்டுமாம்.

குறைந்தது இரண்டு லட்சமாவது கட்டவேண்டியிருக்குமெனெ கலவரப்படுத்தி என்னை மதியத்திலிருந்து அவர் அலுவலகத்தில் தவமிருக்கச் செய்துவிட்டார்.ஐந்து மணிவாக்கில் அவர் அலுவலகத்தில் இருந்து கிளம்பிய போது எல்டாம்ஸ் ரோட்டுக்கும் கே.கே நகருக்குமான தூரம் என்னை அண்ணாநகருக்கு விரட்டியது.

அரை மனதோடு கோயம்பேடு ஜங்ஷன் நெருங்கியபோது கலவர சூழ்நிலை,விசயகாந்த் கட்சி அலுவலகத்திலிருந்து கும்பலாய் தொண்டர்கள் வெளியேறிக்கொண்டிருந்தனர். ஒரு பேருந்தின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்தது, போலீஸார் குறுக்கும்நெடுக்குமாய் ஓட ஏதொ பிரச்சினையென விரைவாக அந்த இடத்தை கடக்க முனைந்தபோதுதான் கவனித்தேன் நாற்சந்தியில் நின்று கொண்டிருந்த அம்பேத்கார் மிஸ்ஸிங் ஆனதை....

பால வேலைகளுக்காக அவர் சிலையை அப்புறப்படுத்தப் போக அதனால் உணர்ச்சிவசப்பட்ட அன்பர்களின் வேலைதான் பஸ் கண்ணாடி உடைப்பு...நல்ல வேளையாக வாகனங்கள் தேங்குவதற்குள் தப்பித்து அண்ணா நகருக்குள் நுழைந்தேன்... குடும்பமே கிருஷ்னா ஸ்வீட்ஸில் மையம் கொண்டிருப்பது தெரியவர....அப்புறமென்ன நேற்று கிருஷ்னா ஸ்வீட்ஸ் ஓனரை சந்தோஷப்படுத்திய புண்ணியம் கிடைத்தது.... ஹி..ஹி...

வீட்டிற்கு வந்தால் இட்லிவடை படங்களை பரிமாறியிருந்தார்.சரி கூட்டம் நல்லா நடந்தா சரிதான்ன்னு மனசார வாழ்த்தீட்டு வலை மேய ஆரம்பித்தேன்.இன்னிக்கு நம்ம பொன்ஸ், லக்கிலுக், விக்கி, பெரியவர் டோண்டு பதிவுகளைப் பார்த்தபிறகு நான் அறிந்து கொண்டவைகள்.

பொன்ஸ் அழகாய் சிரிக்கிறார்,இனிமையான குரல்வளம்(?) உடையவர்...(மெய்யாலுமா தாயீ?...அதுக்காக அடுத்த மீட்டிங்கில் தமிழ்தாய்வாழ்த்து பாடுவேன்னெல்லாம் அடம் பிடிக்கக்கூடாது...ஹி...ஹி)

பெரியவர் ஜோசப்புக்கு நேற்றைய கூட்டம் பற்றி கொஞ்சம் மனவருத்தம்.

போண்டா இல்லாத வலைப்பதிவர் கூட்டத்தில் டோண்டு = திருவிழா கூட்டத்தில் தொலைந்த பிள்ளை(ச்ச்சும்மா டமாஸ் பெரியவர் கோவிக்கவேணாம்.)

வலைப்பதிவின் அடுத்த் கட்ட நகர்வில் என்ன பேசினார்களென தெரியவில்லை, நாம் ஒரு சுய உதவிக்குழு மாதிரி உருவாகலாம்...இந்த வகையில் செந்தழல்ரவியை எத்தனை பாராட்டினனலும் தகும்...கௌசல்யாவுக்கு உதவியதைப் போல நிறைய உருப்படியாய் செய்ய பேசியிருக்கலாம்....பேசவேண்டும்...பேசுவோம்.

ஒருவர் தன் சாதியைப் பற்றி தம்பட்டமடிக்காத வரையில் வலைப்பதிவில் சாதீயம் தொடர்பான சர்ச்சைகளுக்கு வாய்ப்பு குறைவே.


மாதமொருமுறை சந்திக்கலாம்....என் போன்ற சோம்பேறிகள் கூட்டத்திற்கு ஒழுங்காய் வருவதாய் இருந்தால் இது சாத்தியமே.....

மொத்தத்தில் சந்தோஷம்....FBT ரூ.14000 க்கு கொண்டுவந்துவிட்ட ஆடிட்டரின் சாமர்த்தியத்தை சொன்னேன்....ஹி..ஹி...

Thursday, November 16, 2006

ராஸ்கல்ஸ்.....

கடந்த மூன்று நாட்களாய் மதுரையில் சுற்றிக்கொண்டிருந்தேன், வேலைகள் முடிந்த கையொடு ஆத்தா மீனாட்சியிடம் அட்டெண்டன்ஸ் கொடுத்துட்டு வருவோம் என 15-11-2006 காலை 10 மணிக்கு கோவிலுக்கு போனேன்.

என்னை மாதிரியான ட்டிப்பிக்கல் மதுரைக்காரய்ங்களுக்கு மீனாட்சியம்மன் தாய்மையின் அம்சம், அம்மா மாதிரி ஏன் அம்மாவுக்கும் மேலே...குறையோ,நிறையோ அங்கே போய் ஒரு பாட்டம் எல்லாத்தையும் கொட்டித் தீர்த்துவருவது எங்களின் வாடிக்கை, வாழ்வின் தவிர்க்கமுடியாதவைகளில் மீனாட்சியும் ஒருத்தி.என் வரையில் மீனாட்சி வெறும் கடவுள் இல்லை, அதைத் தாண்டிய சினேகமான உறவுடையவள்.

என்ன பில்டப் ஓவராப் போகுதேன்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்களா....மேட்டருக்கு வருகிறேன். பத்து மணிக்கு ஆவலாய் கருவறையை நெருங்கினால் நடை சாத்தியிருந்தது. ஒரே ஒரு அர்ச்சகர் கையில் தட்டுடன் குங்குமம் கொடுத்துக் கொண்டிருந்தார்.மிகுந்த ஏமாற்றத்துடன் அவரை அணுகி "என்னங்க கோவில்ல ஏதும் துக்கமா? என ஏமாற்றத்தினால் விளைந்த கவலையுடன் கேட்டேன். அவரோ அலட்சியமாக "இன்னிக்கு மீனாட்சி ருதுவான நாள் அதான் நடை சாத்திருக்கோம்" எனக் கூற அதிர்ந்து போனேன். பதினொன்னரைக்கு நடை திறப்போம் என அருள் பாலித்தார் அந்த அர்ச்சகர்.

இயலாமை பொங்க ஆத்திரமும் கோவமுமாய் பொற்றாமரைகுளத்தின் படிக்கட்டுகளில் வந்து உட்கார்ந்தேன்.....அப்போது தோன்றிய வார்த்தைதான் இப்பதிவின் தலைப்பு.இதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை...ஏண்டா ஆத்தாவ இப்படி அசிங்கப்படுத்தறீங்க, உங்க வீட்டு பொம்பளைங்களுக்கு வருசாவருசம் இப்ப்படித்தான் செய்வீங்களா? என கேள்விகள் பொங்க, எதையும் வெளிக்காட்டிக்கொள்ளாமல் அடுத்த ஒன்னரை மணி நேரத்திற்கு குமுறலாய் அமர்ந்திருந்தேன்.

இது யார் தவறு, இத்தகைய செயல்கள் தேவைதானா, எத்தனையோ சம்பிரதாயங்களும்,சடங்கு முறைகளும் காலப்போக்கில் சமகால உணர்வுகளுக்கேற்ப மாற்றப் பட்டிருக்கிற நிலையில் இந்த மாதிரி மகளிரை இழிவு செய்யும் சடங்குகள் தேவைதானா?....தாய்மையின் அம்சத்தை கொச்சை படுத்தும் முயற்சிகளை தடைசெய்ய வேண்டுமல்லவா?....இதைப் படிக்கும் அன்பர்கள் எவரேனும் தமிழக அரசின் கவனத்திற்கு இந்த நிகழ்வுகளை எடுத்துக்காட்டி தடை விதிக்கச் செய்தால் வாழ்நாளெல்லாம் நன்றியுடையவனாயிருப்பேன்....

என் வாழ்வில் ரொம்பவும் வேதனைப்பட்ட தருணங்களில் இதுவும் ஒன்று....ம்ம்ம்ம்

Friday, November 10, 2006

மெய்யாலுமே சுட்டதுப்பா....

நீங்கள் யாராய் வேண்டுமானாலும் இருங்கள்...Things It Takes Most Of Us 50 years to learn:

1. The badness of a movie is directly proportional to the number of helicopters in it.

2. You will never find anybody who can give you a clear and compelling reason why we observe daylight-saving time.

3. You should never say anything to a woman that even remotely suggests you think she's pregnant unless you can see an actual baby emerging from her at that moment.

4. The one thing that unites all human beings, regardless of age, gender, religion, economic status or ethnic background, is that, deep down inside, we ALL believe that we are above-average drivers.

5. There comes a time when you should stop expecting other people to make a big deal about your birthday. That time is: age 11.

6. There is a very fine line between "hobby" and "mental illness."

7. People who want to share their religious views with you almost never want you to share yours with them.

8. If you had to identify, in one word, the reason why the human race has not achieved, and never will achieve, its full potential, that word would be "meetings."

9. The main accomplishment of almost all organized protests is to annoy people who are not in them.

10. If there really is a God who created the entire universe with all of its glories, and he decides to deliver a message to humanity, he will NOT use as his messenger a person on cable TV with a bad hairstyle or in some cases, really bad make-up too.

11. You should not confuse your career with your life.

12. A person who is nice to you, but rude to the waiter/janitor, is not a nice person.

13. No matter what happens, somebody will find a way to take it too seriously.

14. When trouble arises and things look bad, there is always one individual who perceives a solution and is willing to take command. Very often, that individual is crazy.

15. Your true friends love you, anyway.

16. Nobody cares if you can't dance well. Just get up and dance.

யாரும் டென்சனாவப்படாது சரியா!


படங்காட்டி கொள்ள காலமாச்சா...அத்தோட இப்ப இங்க க்ளைமேட் வேற ஷோக்காகீது...அதான்...ஹி...ஹி...அப்பால உள்ள வந்தமா சைலண்ட்டா படத்தப்பாத்தமா, சந்தோசப்பட்டமான்னு...போய்ட்டேருக்கனும்.


ஆருக்காவது கோவம் வந்து திட்டித்தான் ஆவேன்னு அடம்புடிச்ச அப்படியே மனசுக்குள்ள திட்டீட்டு கெளம்பீருங்க...சரியா ஹி..ஹி...


ம்ம்ம்ம்...ஏதோ நம்மால முடிஞ்ச கலைச்சேவை...ஹி..ஹி...

எல்லாம் மாயை மக்களே...ஹி....ஹி....மே காட் ப்ளெஸ் யூ ஆல்....ஹி...ஹி...

Thursday, November 09, 2006

ஸ்டார்ட் ம்மீசிக்


மக்களே! தமிழ் வலைபதிவில் முதல் முறையாக பதிவில் பேக்கிரவுண்ட் ம்மீசிக் போட்ட அப்பாவிதான் உங்க பங்காளி என வலையுலக சரித்திரத்தில் எழுதுங்கள்....(வேற யாரும் போட்ருந்தீங்கன்னா முந்திரிக்கொட்டை மாதிரி 'நாந்தான்னு பர்ஸ்ட்டுன்னு' சொல்லி சபைல மானத்த வாங்கீறாதீங்க...ஹி..ஹி..)


நம்ம பர்சனாலிட்டிக்கு சூட்டாகிற மாதிரி ம்மீசிக் தேடினப்ப மனசுல ப்பச்சக்க்னு வந்தது 'மால்குடி டேஸ்' தீம் மீசிக்தான்.நானும் நம்ம சாமி மாதிரித்தான் நெறய விசயத்துல....அதுனால...நீங்களே ஃபினிஷ் பண்ணிக்கங்கப்பா!(சோம்பேறித்தனம்...ஹி..ஹி)

சாமியை வச்சி அதே சூழ்நிலையில நானும் கதையெழுதலாம்னு இருக்கேன்....உங்களுக்கு படிக்கிற அளவுக்கு தில்லிருந்தா உடனே பின்னூட்டம் போடுங்க.....

Wednesday, November 08, 2006

ஜெத்மலானி.-இவர் சிங்கம்!

திரு.ராம் ஜெத்மலானி மீண்டும் பரபரப்பு வளையங்களுக்குள் வந்திருக்கிறார், இம்முறை ஜெசிகாலால் கொலைவழக்கில் குற்றவாளிக்காய் ஆஜராவதனால்....திறமையான புகழ்பெற்ற வழக்கறிஞரான இவர் இதற்குமுன்னரே இம்மாதிரியான வழக்கிகுகளில் பங்கேற்பதன் மூலம் நாடறியப்பட்ட நபராகிவிட்டார்.தான் சரியென நினைக்கும் கருத்துக்களுக்கு ஒத்துவராதவர் எவரையும் துளியும் சங்கோஜமின்றி சாடுவதில் ஜெத்மலானிக்கு நிகர் அவரே....கடந்த ஆட்சியின் போது முன்னாள் பிரதமர் வாஜ்பாயியை பகைத்துக் கொண்டதால் சட்டமந்திரி பதவியையே இழந்தவர்.

உயர்தட்டு மதுபான விடுதியொன்றில் மதுபரிமாறும் பெண்ணான ஜெசிக்காலாலை வாடிக்கையாளர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார்.-இது செய்தி.

ஏறத்தாழ இருநூறு பேர் குழுமியிருந்த அந்த விடுதியில் அரசியல்வாதியின் மகனான மனுசர்மாதான் அந்த கொலையைச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு....வழக்கு நாடகமெல்லாம் நடந்தேறி மனு அப்பாவி என விடுதலை செய்யப்பட்டார்.-இது சரித்திரம் .

சர்வவல்லமை வாய்ந்த அரசியல்வாதியின் முன் ஜெசிக்காவின் நடுத்தரக்குடும்பன் பரிதாபமாய் தோற்றுப்போனது.....இனி வழக்கை நடத்த தங்களிடன் திராணி இல்லை என தங்களின் இயலாமையை கொட்டித்தீர்த்தது பாதிக்கப்பட்ட குடும்பம்.-இது அவலம்.

மற்ற தொலைக்காட்சிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிலையில்,NDTV யின் உரிமயாளர் திரு.பிரணாய்ராய் திடீரென தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து இந்த அநீதியினை காணச் சகிக்காது தன்னுடைய ஊடகம் வாயிலாக நீதிக்காகவும் நியாயத்திற்காகவும் போராடினார்.-இது கருனை.

இவர்களின் அயராத முயற்சியினால் மான்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களின் இடையீட்டினாலும் இவ்வழக்கு மீண்டும் உயிர்கொடுக்கப்பட்டு நேர்மையான விசாரணை நடைபெற வழிவகை செய்யப்பட்டது.-இது சாதனை

NDTV யில் இருந்து பிரிந்து சென்ற திரு.ராஜ்தீப் சர்தேசாய் என்பவரால் துவக்கப்பட்ட CNNIBN, TRP ரேட்டிங்கில் முந்துவதை சமாளிக்க வேறுவழியின்றி பிரனாய் ராயால் தூக்கப்பட்ட ஆயுதம்தான் இந்த ஜெசிக்கா வழக்கு.பரபரப்பாக நடத்தப்பட்ட இந்த ஊடக நாடகத்திற்கு பெரிய நிறுவனங்கள் விளம்பரதாரர்களாய் பணத்தைக் கொட்ட, மக்களிடமிருந்து குறுஞ்செய்தி மூலமாக ஆதரவு திரட்டுகிறேன் பேர்வழியென ஏறத்தாழ 30 லட்சத்திற்கும் அதிகமான குறுஞ்செய்திகள் மூலமாக கிடைத்தபணம்....TRP ரேட்டிங்கில் கிடைத்த முன்னேற்றம்.-இது வியாபாரம்

மறுவிசாரனை துவங்கிவிட்டது,நாடே கவனிக்கிறது என்கிற பதட்டத்தில் விரைவாகவும் நேர்மையாகவும் நடவடிக்கைகள் துவங்கிவிட்டது.தன்னுடைய வியாபார விளையாட்டில் கிடைத்த வெற்றியினை தக்கவைத்துக் கொள்ள இவர்களே குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளியாக காட்டி அதிகபட்சத் தண்டனைதான் தரவேண்டுமென்கிற வகையில் நீதித்துறையையே நிர்பந்திக்கிற சக்தியாக காட்டிக்கொள்ள முயற்சிகளும் நிகழ்ச்சிகளும்..-இது அதிகப்பிரசங்கித்தனம்

இவர்கள்தான் வழக்கினை நடத்துவது போலவும், இவர்கள்தான் நீதிபதிகள் போலவும் தங்களை காட்டிக்கொள்வதில் சந்தோஷித்துக்கொண்டிருந்த இந்த சமூக காவலர்களுக்கு ராம் ஜெத்மலானியின் வரவு எரிச்சலையும், கோவத்தையும் கிளறியிருப்பதில் ஆச்சர்யமில்லை.இதையும் காசாக்க மற்ற ஊடகங்களும் களத்தில் குதிதிருக்கின்றன..இவர்களின் இப்போதைய இலக்கு ராம் ஜெத்மலானி.வழக்கில் அவர் வாதிடக்கூடாது என மிரட்டாத குறையாக அவரை நிர்பந்திக்க முயற்சிகள் நடக்கிறது.இதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனை உத்திகளும் நிகழ்சிகளாக தினம்தோறும் அரங்கேறுகிறது.போட்டி போட்டுக்கொண்டு பணத்தை அள்ளிக்கொண்டே இந்த சமூக சேவையும் நடக்கிறது.-இது அயோக்கியத்தனம்.

இந்த நிர்பந்தங்களுக்கு கொஞ்சமும் மசியாத இந்த கிழவர் இப்படி கர்ஜிக்கிறார்..."Who the hell is the Press to deicide who is indefensible?... I am a great lover of the Press and a great lover of the freedom of speech and expression. But please recognise your limits."...இந்த இனைப்பை பாருங்கள் அதன் பிறகு புரியும்.-இவர் சிங்கமென..