Monday, May 21, 2007

ராஜீவ் - நினைவஞ்சலி

இன்று அமரர் ராஜீவ் நினைவு நாள். அன்னாரின் அரிய புகைபடங்கள் சிலதை பகிர்ந்துகொள்கிறேன்.










Friday, May 18, 2007

குப்பைகள்...


என் இனிய வலையன்பர்களே....

விதி யாரை விட்டது...என்னையும் விடவில்லை, அதன் விளைவாகவே குப்பைகள் என்கிற புதிய வலைபதிவினை துவக்கியிருக்கிறேன்.

இதன் காரணமாக "இட்லிவடை", "சற்றுமுன்" போன்ற வலைபதிவர்கள் கலக்கமடைய வேண்டாமென கேட்டுக்கொள்கிறேன்...ஹி..ஹி...இந்த வலைபதிவு யாருக்கும் போட்டியில்லை.

இங்கே இதுதான் பிரசுரிக்கப்படும் என்றெல்லாம் வரையறை தரமுடியாது...குப்பைகளை தரம் பிரித்து ரீசைக்கிள் பண்ணுவதும், ஒதுக்கிவிடுவதும் உங்கள்பாடு...

ஓக்கே....ஸ்டார்ட் ம்மீசிக்

Thursday, May 17, 2007

சத்யசாய் பாபா இன்று கோவை வருகை


கொடைக்கானலில் இருந்து புட்டபர்த்தி செல்லும் வழியில், ஸ்ரீ சத்ய சாய் பாபா இன்று ( 18ம் தேதி ) காலை 11.00 மணிக்கு கோவை வருகிறார். ஆண்டுதோறும் கோடைக் காலத்தில் தமிழக பக்தர்களுக்கு தரிசனம் வழங்க வசதியாக, ஸ்ரீ சத்ய சாய் பாபா கொடைக்கானலில் இரண்டு வாரம் தங்குவது வழக்கம். கடந்த ஏப்., 26ல் மதுரை வழியாக கொடைக்கானல் வந்திருந்தார். காலை, மாலை இரண்டு வேளையிலும் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

ஏராளமான வெளிநாட்டு பக்தர்களும் ஆசி பெற்றனர்.புட்டபர்த்தி அல்லது பெங்களூரூவில் ஸ்ரீ சத்ய சாய் பாபாவை அருகில் சென்று பார்க்க இயலாது. ஆனால், கொடைக்கானலில் பக்தர்கள் இருக்கும் இடத்துக்கே வந்து ஸ்ரீ சத்ய சாய் பாபா ஆசி வழங்கினார். மிக அருகில் இருந்து தரிசிக்கும் வாய்ப்பு இருந்ததால், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

மூன்று வாரம் கொடைக்கானலில் தங்கியிருந்த சத்ய சாய் பாபா, இன்று ( 18ம் தேதி ) கொடைக்கானலில் இருந்து பழநி, உடுமலை, பொள்ளாச்சி வழியாக காலை 11.00 மணிக்கு கோவை வருகிறார். ஆவராம்பாளையத்தில் உள்ள ராமகிருஷ்ணா திருமண மண்டபத்தில், பக்தர்களுக்கு அருளாசி வழங்க உள்ளார். அதன் பின், மதியம் தனி விமானத்தில் புட்டபர்த்தி செல்கிறார்.

13 ஆண்டுகளுக்கு பின், ஸ்ரீ சத்ய சாய் பாபா கோவை வர இருப்பதால், கோவை பக்தர்கள் மிக ஆவலுடன் ஆசி பெற காத்திருக்கின்றனர்.

Monday, May 14, 2007

NASSCOM ON MARAN RESIGNATION


Mr. Dayanidhi Maran, who is reported to have resigned from the Union Cabinet on Sunday, has been a great champion and friend of the Indian IT sector. NASSCOM, on behalf of the Indian IT industry, would like to put on record its appreciation of the very positive and important role played by Mr. Maran in sustaining the growth of this industry over the last 3 years.

He has been instrumental in reinforcing India's position as the premier destination for IT outsourcing and in taking great interest in promoting the growth of the domestic market for IT. His efforts have resulted in India becoming an increasingly important location for the IT hardware industry also.

During his tenure, Mr. Maran has considerably strengthened the partnership between government and industry in promoting the IT sector in India. His role in bringing major and positive changes in the telecommunications sector have been of great significance to the IT software and services industry. It has also resulted in India becoming the fastest growing mobile telephony market in the world. We look forward to working as closely with Mr. Maran's successor as we did with him.

Thursday, May 10, 2007

ரன்னிங் கமெண்ட்ரி கேட்ட அழகிரி

தினகரன் அலுவலகத்தில் ரவுடி கும்பல் நடத்திய கொலைவெறித் தாக்குதலை செல்போன் மூலம் ரன்னிங் கமென்ட்ரியாக கேட்டு ரசித்துள்ளார் அழகிரி.

வரலாறு காணாத அளவுக்கு வன்முறையை கட்டவிழ்த்துவிட்டு மதுரையே நிர்மூலமாக்கிய அழகிரியின் அடாவடித்தனத்தை கண்டு அவரது ஆதரவாளர்களே அதிர்ச்சி அடைந்துள்ளனர். தினகரன் அலுவலகத்தில் கொலைகார கும்பல் நடத்திய கொடூரத் தாக்குதல் குறித்து பெயர் வெளியிட விரும்பாத, அழகிரியின் ஆதரவாளர் ஒருவரே கண்கலங்க கூறியதாவது:

அழகிரியுடன் எப்போதும் ஒட்டிக் கொண்டிருக்கும் அரசு அதிகாரி பாஸ்கர். அவரிடம்தான் தினகரன் பத்திரிகையை எரிக்கும்படி அழகிரி கூறினார். அழகிரியின் ஆதரவாளர்களை தொடர்பு கொண்ட பாஸ்கர், Ôதினகரனை எரிக்க வேண்டும் என்று அண்ணன் சொல்கிறார். உடனே ஏற்பாடு செய்யுங்கள்Õ என்று கூறினார்.

அதன்பிறகே, பல இடங்களில் தினகரன் பத்திரிகையை எரித்தனர். மதுரை மட்டுமின்றி பல ஊர்களிலும் இதேபோல தினகரன் பத்திரிகைகளை கட்டுக்கட்டாக போட்டு எரித்தனர். Ôசொன்னதைச் செய்துவிட்டோம். பல இடங்களில் தினகரன் பத்திரிகையை நமது ஆட்கள் கொளுத்திவிட்டனர்Õ என்ற தகவலை அழகிரியிடம் பாஸ்கர் தெரிவித்தார்.

இதைக் கேட்டதும் அழகிரி, கோபத்தில் எரிந்து விழுந்தார். Ôதினகரனை கொளுத்துடான்னா, பேப்பரையாடா கொளுத்தறது. பத்து பேப்பரை கிழிச்சு எரிக்கிறதுதான் வீரமாடா? போங்கடா... போய் அந்த பத்திரிகை ஆபீசை கொளுத்துங்கடாÕ என்று திட்டினார். பயந்து போன பாஸ்கர், அழகிரி சொன்ன விஷயத்தை உடனே எல்லாருக்கும் போனில் சொன்னார்.

அவ்வளவுதான். அடியாட்கள், ரவுடிகள் எல்லாரும் கும்பல், கும்பலாக தினகரன் அலுவலகத்துக்கு படையெடுத்துச் சென்று சூறையாடினர். பெட்ரோல் குண்டுகளை வீசினர். அலுவலக வளாகத்தில் நின்றிருந்த வாகனங்களை எரித்தனர். ஊழியர்கள் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினர்.
காலை 9 மணிக்கு தொடங்கிய தாக்குதல் நான்கு மணி நேரம் நடந்தது. அழகிரியுடன் இருந்த பாஸ்கள், நிமிடத்துக்கு நிமிடம் அடியாட்களை செல்போனில் தொடர்பு கொண்டு என்ன நடக்கிறது என கேட்டபடி இருந்தார். அவர்களும் தங்களின் வீரபிரதாபங்களைப் பற்றி ரன்னிங் கமெண்ட்ரி போல செல்போனில் பாஸ்கரிடம் தெரிவித்தனர். அதை அப்படியே அழகிரியிடம் பாஸ்கர் சொல்ல, அதை அழகிரி கேட்டு ரசித்தார்.

"இதைத்தான்டா நான் எதிர்பார்த்தேன்" என்று கூறி சிரித்தார். அழகிரிக்கு எப்போதுமே சகிப்புத் தன்மை என்பது துளியும் கிடையாது. அதனால், சின்ன விஷயங்களுக்கு கூட, காட்டுமிராண்டித்தனமாக தாக்கச் சொல்வார்.

இவ்வாறு அழகிரி ஆதரவாளர் தெரிவித்தார்.

தகவல்- தமிழ்முரசு

Wednesday, May 09, 2007

நான் தி.மு.க தலைவராக இருந்தால்...

இன்றைய தினத்தில் நான் தி.மு.க தலைவராக இருக்கும் பட்சத்தில் கீழ்கண்ட நடவடிக்கைகளை அறிவித்திருப்பேன்...

1.கட்சியின் உள் கட்டமைப்புக்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டதால் சன் நெட்வொர்க் குழுமம் அன்னா அறிவாலயத்திலிருந்து செயல்படும் தார்மீக உரிமையை இழந்து விட்டது. எனவே உடனடியாக அறிவாலயத்திலிருந்து வெளியேற வேண்டும்..

2.கட்சிப் பணிகளில் இளைஞர்களை மேலும் தீவிரமாக ஈடுபடுத்தும் வகையில் மத்திய அமைச்சரவையில் சிறப்பாக செயல்பட்டு வரூம் திரு.தயாநிதிமாறன் கட்சி பணிகளுக்காக திரும்ப அழைக்கப்படுகிறார். அதன் காரணமாக அவர் தனது ராஜினாமா கடிதத்தினை பிரதமரிடம் சமர்ப்பிக்க கட்சி தலைமை கட்டளையிட்டிருக்கிறது.

3.மதுரையில் வன்முறையில் ஈடுபட்டதாக தெரியும் அனைத்து கழகத்தவர்களும் மறு அறிவிப்பு வரும் கட்சியிலிருந்து நீக்கி வைக்கப்படுகிறார்கள்.

4.திரு.அழகிரி நடந்த சம்பவங்களுக்கு தார்மீக பொறுப்பினையேற்று பாதிக்கப்பட்டவர்களிடம் வரூத்தம் தெரிவித்து தேவையான நஷ்டஈடுகளை செய்யவேண்டும். அதுவரை கட்சி கட்டுப்பாடுகளை மீறியதற்காகாஅவர் கட்சியில் இருந்து இடைநீக்க்கம் செய்யப்படுகிறார்.


இதை கலைஞர் செய்வாரா...?



நடந்த சம்பவங்கள் குறித்த அழகிரியின் பேட்டியாக தினமலர் தந்துள்ள செய்தி....

கருத்துக்கணிப்பு வெளியிட்ட ஜென்மங்கள் நேரில் வரட்டும்: மு.க. அழகிரி சவால்

மதுரை: கருத்துக்கணிப்பு வெளியிட்ட ஜென்மங்கள் நேரில் வரட்டும். யாருக்கு ஆதரவு என தெரிந்து கொள்ளட்டும் என முதல்வர் கருணாநிதி மகன் அழகிரி சவால் விடுத்தார்.
மதுரையில் நிருபர்களிடம் மு.க. அழகிரி கூறியதாவது: கருத்துக்கணிப்பு வெளிவந்த அந்த நாளிதழை நான் படிப்பதே இல்லை. தலைவர் (கருணாநிதி) மீது ஆணையாக இதை சொல்கிறேன். கருத்துக்கணிப்பு வெளியிட்ட "ஜென்மங்கள்' நேரில் வரட்டும். தமிழகம் முழுதும் அழைத்துச்செல்கிறேன். எனக்கு எவ்வளவு ஆதரவு, அந்த ஜென்மங்களுக்கு எவ்வளவு ஆதரவு என்பதை தெரிந்து கொள்ளட்டும். இதை யார் செய்தார்களோ அவர்கள் மீது தலைவர் நடவடிக்கை எடுக்கட்டும். ஏற்கனவே யாரோ தெரிவித்த தவறான தகவலின் அடிப்படையில் என் மீது நடவடிக்கை எடுத்தனர். அதே போல இப்போதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நான் பதவிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தால் என்னை பற்றி கருத்துக்கணிப்பு எடுக்கலாம். கட்சிப் பதவியிலேயே நான் கிடையாது. இவ்வாறு இருக்கும் போது என் தம்பி (ஸ்டாலின்) இடத்திற்கு வரவேண்டும் என நான் எப்படி நினைப்பேன். கட்சிக்கு நல்லது செய்ய வேண்டும் என உழைக்கிறேன். எனவே கட்சி வளர்கிறது.
கருத்துக்கணிப்பை பார்த்து என் தம்பி என்னிடம் பேசி வருத்தப்பட்டார். அதை கண்டித்தார். தமிழ்ப் புத்தாண்டு அன்று தலைவரின் வாழ்த்துச் செய்தியை கூட அந்த நாளிதழ் வெளியிடவில்லை. நான் எதற்கும் ஆத்திரப்படவில்லை. பதவிக்கு வரவேண்டும் என்றும் எதிர்பார்க்கவில்லை. இந்த கருத்துக்கணிப்பை வெளியிட தேவையே இல்லை. இப்போது தேர்தலா வருகிறது? தேர்தல் நேரம் என்றால் நான் பதவிக்கு போட்டியிடுகிறேன் என்றால் கருத்துக்கணிப்பை வெளியிடலாம்.
"அவர்கள்' நிறைய பணம் வைத்துள்ளனர். பணத்தை வைத்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம், எதை வேண்டுமானாலும் வாங்கலாம் என நினைக்கின்றனர். அது தவறானது. தலைவருக்கு பொன்விழா நடக்க இருக்கும் இந்த நேரத்தில் அவருக்கு மனகசப்பையும், மனஉளைச்சலையும் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளனர்.
பஸ்கள் மீது கல்வீச்சு நடந்தது பற்றி எனக்கு தகவல் இல்லை. அவர்களாகவே வேண்டும் என்றே இதை செய்திருக்கலாம். இவ்வாறு அழகிரி கூறினார்.

Thursday, May 03, 2007

முத்தம் - அருஞ்சொற்பொருள் விளக்கம்...

இன்னிக்கு மெயில்ல வந்தது....ங்கொக்கா மக்கா இதெல்லாம் எங்கனதான் உக்காந்து யோசிப்பாய்ங்களோ தெரியலை. எல்லா அர்த்தமும் சரியாத்தான் இருக்கு....சரி வந்த சான்ஸ விட்றகூடாதுல்ல...அதான் வந்த மேட்டரவச்சி ஒரு மொக்கை பதிவு.

இன்னொரு காரணமும் இருக்கு...அதாவது நாளைக்கு வர்ற சந்ததிகள் பங்காளி ஒரு மொக்கை பதிவு கூட போடலைன்னு சொல்லீடகூடாது பாருங்க....அதான் இப்படியொரு முயற்சி...ஹி..ஹி



Professors of different subjects define the same word in different ways:



Prof. of Computer Science:
A kiss is a few bits of love compiled into a byte.

Prof. of Algebra:
A kiss is two divided by nothing.

Prof. of Geometry:
A kiss is the shortest distance between two straight lines.

Prof. of Physics:
A kiss is the contraction of mouth due to the expansion of the heart.

Prof. of Chemistry:
A kiss is the reaction of the interaction between two hearts.

Prof. of Zoology:
A kiss is the interchange of unisexual salivary bacteria.

Prof. of Physiology:
A kiss is the juxt a position of two orbicular ors muscles in the state of contraction.

Prof. of Dentistry:
A kiss is infectious and antiseptic.

Prof. of Accountancy:
A kiss is a credit because it is profitable when returned.

Prof. of Economics:
A kiss is that thing for which the demand is higher than the supply.

Prof. of Statistics:
A kiss is an event whose probability depends on the vital statistics of 36-24-36.

Prof. of Philosophy:
A kiss is the persecution for the child, ecstasy for the youth and homage for the old.

Prof. of English:
A kiss is a noun that is used as a conjunction; it is more common than proper; it is spoken in the plural and it is applicable to all.

Prof. of Engineering:
Uh, What? I'm not familiar with that term.

CHEENI KUM



வெளிவர இருக்கும் அமிதாப்பின் அடுத்த படமான CHEENI KUM(சர்க்கரை கம்மியா...). படத்தின் தகவல்களை மேய்ந்து கொண்டிருந்த போது,நம்ம முதல் மரியாதையை காஸ்மோபாலிட்டன் பாத்திரத்தில் பரிமாறுகிறார்களோ என்கிற எண்ணம் வராமலில்லை.படம் வெளி வந்த பின்னர் 'பங்காளி எப்படிடா உன்னால மட்டும் இப்படியெல்லாம் யோசிக்க முடியுது' என நீங்கள் உணர்ச்சி வசப்படும் நிலமை வந்தாலும் வரலாம்.

படத்தில் அமிதாப்பை லவ்வும் பெண்ணாக தபு நடித்திருக்கிறாராம்(யோவ்...அமிதாப், எங்கய்யா வச்சிருக்க அந்த மச்சத்த...).இவர்களை தவிர தபுவின் தந்தையாக வரும் பரேஷ் ராவல் இன்னொரு முக்கியமான கதாபாத்திரம்.



இந்த பதிவு எழுத காரணமே இந்த படத்தில் இருக்கும் முத்தமிழர்களே(மூன்று தமிழர்கள்).படத்தின் இயக்குனர் பால்கி எனபடும் பாலகிருஷ்ணன், இவர் Lowe India என்கிற மிகப்பெரிய விளம்பர நிறுவனத்தின் National Creative Director.

விளம்பர துறையில் 18 வருஷம் கொட்டை போட்ட பின்னர் இப்போது வெள்ளிதிரைக்கு வந்திருக்கிறார். இளையராஜாவின் தீவிர ரசிகரான இவர் தனது விளம்பரங்களில் இளையராஜாவின் இசையை உருவி(Inspiration...ஆம்) சாமர்தியமாக பயன்படுத்தியவர் என்கிற குற்றசாட்டு காலங்காலமாக சொல்லப்படுகிறது......

இந்நேரத்திற்குள் படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவென கண்டுபிடித்திருந்தீர்களானால் மெய்யாலுமே நீங்கள் ச்சமத்துதான்....இளையராஜாவின் first major original Hindi film என விளம்பரபடுத்தியிருக்கின்றனர்...ஆச்சர்யமான செய்தி இல்லையா....ம்ம்ம்ம்.

மனிரத்னத்தின் மௌனராகமான 'மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சமில்லையா' பாடலின் மெட்டை அப்படியே பயன்படுத்தியிருக்கின்றனர்....இன்னொரு பாடலான 'ஜானே தோனா'பாடலும் இன்னொரு பிரபல தமிழ்பாடலின் மெட்டே...'குழலூதும் கண்ணனுக்கு குயில்பாடு பாட்டு கேக்குதா' சாயலிலும் ஒரு பாடல், ஒரே வித்தியாசம் இங்கே ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கிறார் அவ்வளவே....இசைஞானிக்கே இசை வறட்சியா....

படத்தில் இருக்கும் மூன்றாவது தமிழர் நம்ம PC.ஸ்ரீராம்...இவர் பெயரை பார்த்தவுடன்தான் படத்தை மிஸ் பண்ணீரக்கூடாது என தோன்றியது.

இதுக்கு மேலயும் படத்தப்பத்தி எழுதினா அப்புறம்...'படத்தோட வெளம்பர நிர்வாகத்த நீங்கதான் கவனிக்கனும்னு' படத்தோட தயாரிப்பாளர் நம்மள கெஞ்ச ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சுருவார்..நாம இருக்கிற பிஸி..ல அதெல்லாம் நம்மால ஆவாது. அதுனால இந்த அளவில் உங்களிடம் இருந்து விடைபெற்றுக் கொள்கிறேன்.

படத்தின் இனைய தளம்....