Thursday, February 22, 2007

துக்க நிவாரணி....

ஏதோவொரு வகையில் பிறரை சார்ந்திருப்பவனிடம் சலனம் மிகுந்திருக்கிறது.

சுதந்திரமாக இருப்பவனிடம் சலனம் இருப்பதில்லை.

சலனமில்லாத இடத்தில்தான் அமைதி உண்டாகிறது.....

அமைதியான இடத்தில்தான் இன்பம் பிறக்கிறது.

இன்பத்தை தேடும் போதுதான் வரவும் செலவுமாக நிலைமாற்றங்கள் தோன்றுகின்றன.

நிலைமாற்றங்கள் எங்கில்லையே அங்கேதான் துக்கத்தின் முடிவும் இருக்கிறது....



இந்த பதிவிற்கான காரணங்கள்...

1.புத்தரை பற்றி படிக்க ஆரம்பித்ததின் தாக்கம்
2.பதிவெழுதுவதை மறந்துவிடக் கூடாது என்பதனால்..
3.இதை எத்தனை பேர் ஒத்துக்கொள்வீர்கள் என தெரிவதற்காக..

Sunday, February 11, 2007

மிதக்கும் பாறை..!

சவுதி அரேபியாவில் AL-Hassa பகுதியில் ஒரு பெரிய பாறையொன்று ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் சுமார் 30 நிமிடங்களுக்கு தரையிலிருந்து 11 செண்டி மீட்டர் உயரத்தில் மிதக்கிறதாம். நம்புற மாதிரியா இருக்கு.... படத்தப் பாருங்க....ம்ம்ம்ம்


ஊர்ல என்ன சொல்றாங்கன்னா...1989ல் ஏப்ரல் மாசம் அதாவது17 வருஷத்துக்கு முன்னால இந்த பாறைக்கு பின்னால ஒரு தீவிரவாதி ஒளிஞ்சிருந்ததாகவும் அவனை போலீசார் என்கவுண்டரில் போட்டுத்தள்ளியதாக கூறுகின்றனர்.

இப்பவும் அந்த பாறையில் ரத்தக்கறைகளை கானலாமெனவும், கல் மேலே உயரும் போது அந்த கறை கறுத்து ஈரமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். ஊர் மக்கள் அதை அழிக்க முயன்றதாகவும்...அழித்தாலும் அது பின்னர் தோன்றியதாகவும் கூறுகின்றனர்.படத்தினை பெரிதாக்கி பார்க்க உங்கள் எலிக்குட்டியால் படத்தை முத்தமிடவும்(ஹி..ஹி...வேலெண்டைன் டே எஃபெக்ட்).

இது உண்மைதானான்னு விசாரிச்சுச் சொல்லுங்கப்பேய்....

Monday, February 05, 2007

நம்மாலும் தேர்தலை நிறுத்த முடியுமாம்...

எனக்கு மின்னஞ்சலில் வந்த செய்தியினை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.....இதன் உண்மைத்தன்மையை அறியேன். தெரிந்தவர்கள் விளக்கலாம். இது உண்மையாயிருக்கும் பட்சத்தில் நமது தேர்தல் கமிஷன் இதுவரை இதை விளக்கி அறிவிப்பு ஏதும் கொடுத்ததாக தெரியவில்லை.....ஏன் செய்ய மறந்தார்கள்?

Section 49-O of the Constitution

Did you know that there is a system in our constitution, as per the 1969 act, in section "49-O " that a person can go to the polling booth, confirm his identity, get his finger marked, and convey the presiding election officer that he / she doesn't want to vote anyone !
Yes, such a feature is available, but obviously these seemingly notorious leaders have never disclosed it. This is called " 49-O ".
Why should you go and say "I VOTE NOBODY " ? ... Because, in a ward, if a candidate wins, say by 123 votes, and that particular ward has received " 49-O" votes more than 123 , then that polling will be cancelled and will have to be re-polled. Not only that, but the candidature of the contestants will be removed and they cannot contest the re-polling, since people had already expressed their decision on them.
This would bring fear into parties and hence look for genuine candidates for their parties for election. This would change the way, of our whole political system... it is seemingly surprising why the election commission has not revealed such a feature to the public.... Please spread this news to as many as you know... Seems to be a wonderful weapon against corrupt parties in India... show your power, expressing your desire not to vote for anybody, is even more powerful than voting... so don't miss your chance.
So either vote, or vote not to vote ( vote "49-O ") and pass on this info...
Please forward this mail to as many as possible, so that we, the People of India, can really use this power to save our nation.
Use your voting right for a better INDIA.
SO, IF YOU DON'T WANT TO VOTE PLEASE GO TO POOLING BOOTH AND PUT YOU VOTE TO "NOT TO VOTE", IT WILL ALSO REDUCE BOOTH CAPTURING.
JAGO INDIA JAGO

சாய் அற்புதமா....

சாய் அற்புதமா?...என்கிற முந்தைய பதிவின் தொடர்ச்சியாக இதை பதிகிறேன்.இனி நான் விவரிக்கப் போகும் இரண்டு சம்பவங்களும் தற்செயலான நிகழ்வுகளா அல்லது அந்த சூழல் தந்த அமானுஷ்ய உணர்வுகளினால் அவை அற்புதங்கள் என நினைக்க வைத்தனவா என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை......இயன்றவரை மிகைப்படுத்துதல் இல்லாது நேர்மையாக பகிர்ந்து கொள்ள நினைத்தேன் பகிர்ந்து கொள்கிறேன்....அவ்வளவே.




இது நடந்து மூன்று வருடங்கள் இருக்கும்....

அப்போது என்னிடம் ஹுண்டாய் அக்ஸண்ட் இருந்தது. மார்ச் மாத கடைசியில் ஒருநாள் அண்ணா நகர் சாந்தி காலனி அருகில் எனது காரின் வலதுபக்க முன் டயர் பெரிய சத்தத்துடன் வெடித்தது. கீழிறங்கி பார்த்தபோது டயர் தெறித்து கம்பி வலையெல்லாம் பிய்த்துக்கொண்டு கோரமாய் இருந்தது.பக்கத்தில் இருந்த கடையில் சொல்லி ஸ்டெப்னி மாற்றிக் கொண்டு போய்விட்டேன்.

புது டயர் வாங்கவேண்டுமென்று நினைத்தாலும் அது தள்ளிப்போனது(பட்ஜெட்...ம்ம்ம்). இந்த நிலையில் தமிழ்புத்தாண்டுக்கு பெங்களூரு வொயிட்ஃபீல்ட் ஆஸ்ரமத்தில் பாபாவை தரிசிக்கலாமென குடும்பம் ஏகமனதாய் முடிவெடுத்தது. எனது மாமாவும் வருவதாக கூறினார்...டயரை மனதில் கொண்டு அவரது காரில் போய்விடலாமென கூறியிருந்தேன்.

ஏப்ரல் 13....அவர் வீட்டிற்கு சென்றபோது....அவரது காரில் பெட்ரோல் அடைப்பதால் என் வண்டியிலேயே போய்விடலாமென கூற அதிர்ச்சியாக்கினார்....மனுசனோ கோவக்காரர், தடங்கலாய் ஏதாவது சொன்னால் அப்செட் ஆகிவிடுவாரென...மெல்லவும் முடியாமல் முழுங்கவும் முடியாமல் விதியின் மேல் பாரத்தைப் போட்டு கிளம்பினேன்.

வழக்கமாய் பெங்களூரு செல்லும் பாதைதானே சமாளித்துக்கொள்ளலாம் என கொஞ்சம் நம்பிக்கையுடன் இருந்த போது...இந்த தடவை கோலார் வழியே போவோம் என அடுத்த குண்டைப்போட்டார்...கோலார் வழியில் ஒரு ஈ...காக்காயை பார்க்கமுடியாது....அத்தனை வெறிச்சென்ற பாதை....

இந்த இடத்தில் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்....எனக்கு எப்பொழுதுமே கடவுளிடம் பேரம் பேசுவதோ...கெஞ்சுவதோ பிடிக்காத ஒன்று...அதனால் கடவுளின் உதவியை கேட்கவேண்டுமென தோன்றவே இல்லை.

....ம்ம்ம்ம்...உலகத்தில் உள்ள அத்தனை எண்ணையையும் கண்ணில் ஊற்றிக்கொண்டு வண்டியோட்டினேன் என்றுதான் சொல்ல வேண்டும். இருட்ட ஆரம்பிக்க இனம் புரியாத பயம் கவ்வியவாறே ஒரு வழியாய் பெங்களூரை நள்ளிரவில் அடைந்தோம்.எல்லோரும் களைப்பாய் தூங்க கொட்ட கொட்ட விழித்து வண்டியோட்டியவன் இரவு முழுவதும் அதையே தொடர்ந்தேன்.

மறுநாள் காலையில் ஸ்வாமியின் தரிசனம்......புதுவருடத்தில் ஞானகுருவின் தரிசனமும் அந்த சூழலும் மனதிற்கு இதமாயிருந்தது. தரிசனம் முடிந்த கையோடு சென்னை கிளம்ப வேண்டுமென்பதில் குறியாய் இருந்தேன். பகலிலேயே பயணத்தை வைத்துக்கொள்ள வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தேன். மீண்டும் கோலார் வழியேதான் போகவேண்டுமென வற்புறுத்த அவ்வாறே எவ்வித பிரச்சினையுமின்றி சென்னை திரும்பினேன்...

இதிலென்ன அற்புதமிருக்கிறது என்கிற சலிப்பு வந்தால் கொஞ்சம் பொறுங்கள்....

இரண்டு நாள் தூக்கத்தை ஒரே நாளில் தூங்கினேன் என்றுதான் சொல்லலாம்.காலையில் அலுவலகம் கிளம்பும் போது பார்த்தால் வண்டி பஃங்ச்சர்....இப்போது வலது பின் டயர்.

என் ஆட்களை அழைத்து பஃங்சர் போட சொல்லிவிட்டு வீட்டிற்குள் வந்துவிட்டேன்....கொஞ்சத்தில் எனது ஆட்கள் அழைக்க வெளியே வந்தேன்...சார் ஸ்டெப்னி நல்லா இருக்கு அதை மாத்திடறேன்...நீங்க கிளம்புங்க நான் பஃங்சர் போட்டு வைக்கிறேன் என...தொடர,... சரியாக பார்க்காமல் இம்சையாக்கறானே என எரிச்சல் பற்றிக்கொண்டு வந்தது.

அது கிழிஞ்ச டயர்...சரியா பாரு என கோவிக்க...அவன் எரிச்சலாகி ஸ்டெப்னியை தூக்கி என் முன்னால் தரையில் போட...எம்பிக்குதித்தது......ம்ம்ம்ம்ம்ம்ம்

கிழிந்த டயரை நாண்தான் காரில் தூக்கிப்போட்டேன்....இப்போது எந்த கிழிசலுமில்லாமல்,முழுசாய்.... என்னுடைய மனநிலை எத்தகையதாக இருக்கும் என்பதை உகித்துக்கொள்ளுங்கள்.

இதற்கு மேல் இந்த சம்பவத்தை விவரிக்கவோ விவாதிக்கவோ விரும்பவில்லை...ம்ம்ம்ம்ம்ம்




இரண்டாவது சம்பவம்....கடந்த வருடம்....

ஒரு நாள் மதியம் திடீரென புட்டபர்த்தி போய்வந்தால் நல்லாயிருக்குமென தோன்றியது....ஆனால் எப்படி போவது, அத்தனை தூரம் காரோட்டுவதில் ஆர்வமில்லை. அங்கே இதுவரை பேருந்தில் போனதுமில்லை...போவதற்கும் சலிப்பாயிருந்தது....ஆனால் போகவேண்டுமென்கிற உந்துதல் இருந்தது.

கொஞ்சத்தில் திடீரென என் செல்பேசியில் அழைப்பு...அந்த நபர் Air Deccan அலுவலகத்தில் இருந்து அழைத்திருந்தார்...முன்பு எப்போதோ ஒரு தடவை அவரை சந்தித்திருக்கிறேன், பெரிதாய் நினைவில்லை. அவர் என்னிடம் நாளைமுதல் அவர்கள் புட்டபர்த்திக்கு விமானசேவையினை ஆரம்பிக்க இருப்பதாகவும், முதல் ஃப்ளைட்டில் போய் அடுத்த நாள் திரும்பி வர ஒரு Complimentary Ticket அனுப்பியிருப்பதாகவும்...அவசியம் நாளை வரவும்...விமான நிலையத்தில் சந்திக்கிறேன் எனக்கூறினார்.

இத்தனைக்கும் அவர்கள் சேவையில் அதிகம் பறக்காதவன் நான்...கொஞ்ச நேரத்திற்கு ஒன்றுமே புரியவில்லை.....அவர்களின் முதல்நாள் சேவையில் என்னை கட்டணமின்றி அழைத்துப்போய்...அடுத்த நாள் திரும்பவும் கூட்டி வருகின்றனர்....

விவரிக்க இயலாத உணர்வுடன் போய் வந்தேன்...அந்த முறைதான் முதல்முறையாக பாபா என்னை கண்ணோடு கண் நோக்கினார்....சிரித்தார்...அது தற்செயலா.......அற்புதங்களின் தொடர்ச்சியா.....தெரியவில்லை...ம்ம்ம்ம்ம்

நான் ஒரு அரைவேக்காட்டு ஆ(நா)த்திகன் என்பதையும் இந்த இடத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

Friday, February 02, 2007

டாய்லெட்ல ரெஸ்ட்டாரெண்ட்


என்ன இம்சைடா....டாய்லெட்ல ரெஸ்ட்டாரெண்டாரெண்ட்டானு தோனுதா....ஹி..ஹி...அப்டித்தான் நடக்குது தாய்வான்ல. படத்தப் பாருங்க, எல்லாம் டாய்லெட் மாதிரி செட்டப்தான்.
சும்மா சொல்லக்கூடாது....நல்லாத்தான் இண்ட்டீரியர் பண்ணீருக்காய்ங்க...!
ஐஸ்க்ரீம் இந்த மாதிரித்தான் சர்வ் பண்ணுவாங்களாம்....உவ்வே...!
சாப்ட போற நேரத்துல பார்த்தேன்னு யாரும் திட்டாதீகப்பூ....எல்லாம் நெட்ல சுட்டது.

வெள்ளாடலாமா....?

ஒரு ச்சின்ன வெள்ளாட்டு...சரியா,

மொதல்ல உங்களோட favorite website ஒன்ன தெறந்து வச்சிக்கங்க - பங்காளியோட சைட்டத்தான் தொறப்பேனெல்லாம் அடம்பிடிக்க கூடாது...ஹி...ஹி...

1. Remove everything from the address bar, then copy & paste the following into it:

javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI=document.images; DIL=DI.length; function A(){for(i=0; i-DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5; DIS.top=Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5}R++}setInterval('A()',5); void(0);

2. Hit enter

இப்ப பாருங்க வெள்ளாட்ட...ஹி..ஹி...

(தைரியமா வெள்ளாடுங்கப்பு...)

(இது நெட்டுல சுட்டது)

மூத்த பதிவர்



Donald Crowdis ....இவர்தான் வலையுலகின் மிக மூத்த பதிவராக இருக்க கூடும். வயது 92. முன்பு கனடா தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவராம். பெருசு கலக்கறாருங்கோவ்....

ம்ம்ம்ம்....நம்முடைய வயதான பதிவர்களை நினைத்தால்....ஹி...ஹி...ம்ம்ம்ம், வேணாம்ப்பா நோ கமெண்ட்ஸ். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதானே....

சாய் அற்புதமா?

மோதிரம் கொடுத்தார், விபூதி கொடுத்தார், வாட்ச் கொடுத்தார்...ஏண்டா இது வரை ஒரு பூசணிக்கா தரல. எல்லாம் கைக்குள்ள அடங்கற மாதிரி பொருளாவே தர்றார். அவர் கொடுத்த சீக்கோ வாட்ச்ல கம்பெனியோட சீரியல் நம்பர்லாம் வருதே எப்படி?.இந்த அஜால்குஜால் வேலையெல்லாம் வீடியோவுல நல்லா தெரியுது பார்....இந்த பிரச்சாரங்கள் அவருக்கெதிராய் ஒரு துரும்பைக்கூட அசைக்கவில்லை என்பதுதானே உண்மை.

இந்த நாட்டில், நான் கூட என்னை கடவுளாக அறிவித்துக்கொள்ள உரிமை இருக்கிறது, அதை ஸ்திரப்படுத்த அத்தனை வகை வியாபார உத்திகளையும் செயல்படுத்தி,எதிர்வரும் சவால்களை ஊதித்தள்ளி என்னை கடவுளென நம்பவைக்கும் ஆளுமையும் இருக்கிறது. முடிந்தால் என்னை தோலுறித்து காட்டுங்கள்...அறுபத்தி நாலு வருடமாய் அதற்காய் ஆக்கபூர்வமாய் என்ன செய்திருக்கிறீர்கள்....நான் அயோக்கியன் என தெரிந்தும் என் தந்திரத்திற்கு முன்னால் நிற்கமுடியாது தெருவில் நின்று உளையிடுவதைத் தவிர வேறு எதை சாதித்திருக்கிறீர்கள்?. நாளின் முடிவில்(End of the Day) நான் கடவுளாக உறுதிப்படுவதும்...நீங்கள் ஊளையிடுவதாய் நிற்பதும்தானே நிஜம்.

அவர் கடவுள்தான் என அவரது பக்தர்களைவிட இந்த விமர்சகர்கள் நம்பினர் என்பேன்.ஆசாபாசங்கள் நிறைந்த சாதுர்யமான சாமானியன்தான் சத்யசாய் என்பதை அவர்கள் உணர மறுத்தார்கள் என்பதே எனது குற்றச்சாட்டு....கடவுள் இல்லையென நிரூபிக்க பாடுபட்ட இவர்கள் இவர் சாமானியனே என உணர்த்த பாடுபட்டிருக்க வேண்டும்.இன்னும் சொல்லப்போனால் காலத்தின் துனையோடு அவர் ஜெயித்துவிட்டதாகவே நினைக்கிறேன்.தோல்வியை ஒப்புக்கொள்ள மனமில்லாது இன்னமும் புலம்பிக்கொண்டிருக்கிறோம்.

இனி கொஞ்சம் வேறு பாதையில் சிந்திப்போமா.....

அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் வாழ்வில் உறவுகள் தேவைப்படுகிறது.
கடவுளையும் மனிதனையும் இனைக்கும் உறவை என்னவென்போம்...பக்தி எனலாமா?....பொதுவில் உறவுகள் என்பது ஒருவகையான இளைப்பாறும் மனப்பான்மை,கடவுளுக்கும் மனிதனுக்குமான உறவு என்பது சௌகரியமான பொய், அவசியமான உண்மை.உதவும் பொய்களுக்கும் தேவையான உண்மைகளுக்கும் இடையே இருப்பதுதான் வாழ்க்கை.

இந்த உறவின் நிழழே போதுமென்றால் அதிலேயே தங்கிவிடலாம். அது தற்காலிக தேவைதான் என்று தெரிந்தால் - வாழ்வின் பாதையை தொடரலாம். உண்மைகளைத்தான் தொடரவேண்டுமில்லை.பொய்களையும் தொடரலாம். உண்மை நிஜத்தின் தரை, நடக்கத்தான் முடியும்..ஆனால் பொய் ஒரு கனவின் விஸ்தாரம் -பறக்கவும் முடியுமெனும் ஆசையை நம்பிக்கையாக்கும் அரிதாரத்தின் ஆதாராம்..இதுதான் பக்தி என்பதை உணரத் தலைப்படவேண்டும்.

இந்த உறவினால் எதெல்லாம் சாத்தியமாகிறது....

*உள்ள குமைச்சலையும், குமுறலையும் பயமின்றி பரப்பி வைக்க ஒரு தளம்
*தன்னை அங்கீகரித்து ஏற்றுக்கொள்வதால் உள்ளுக்குள் உணரும் சுயமரியாதை
*தன் சக்திக்கு மீறிய காரியங்களுக்கு தக்க சமயத்தில் கிடைக்கும் உதவி
.....இப்படி பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

ம்ம்ம்ம்ம்.....எத்ற்காக இத்தனையும் எழுதிக்கொண்டிருக்கிறேன். சலிப்புதான் வருகிறது, யாருக்கும் தெரியாததை எழுதவில்லை, எனவே இந்த பதிவினை இந்த அளவில் முடித்துக்கொள்வதுதான் நம் இருவருக்குமே நல்லது....

எனது அனுபவத்தில் அற்புதமாக தோன்றிய இரண்டு நிகழ்வுகளை அடுத்த பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

இந்த பதிவில் உள்ள சில வரிகள் ருத்ரனிடமிருந்து திருடப்பட்டவை(அனுமதியில்லாது எடுத்தால் அதன் பேர் திருட்டுத்தானே !)

Thursday, February 01, 2007

வயது வந்தவர்களுக்கு மட்டும்...

தமிழில் சுதந்திரமாய் தன் போக்கில் பதிவும் பதிவர்கள் வெகு குறைவு. போலியான அடையாளங்கள், வாசகவட்டத்திற்கு இணக்கமான பதிவுகளை மட்டுமே வலிந்து பதிந்து புனிதபிம்பமாய் காட்டிக்கொள்ள மெனகெடுதலில் எனக்கு உடன்பாடு இருந்ததில்லை.

என் பதிவு தமிழ்மணத்தில் இனைக்கப் பட்டுள்ளதால் இங்கே உருவாக்கப்பட்டுள்ள கலாச்சார வரம்புகளை மீறி பரிசோதனைகள் எதையும் செய்ய இயலவில்லை என்பதை வேதனையுடன் ஒப்புக்கொள்கிறேன்.

அய்யோ..அவங்க படிப்பாங்க...இவங்க படிப்பாங்க...ச்சின்ன புள்ளைங்க வந்து போகுது, வீட்ல இருக்கற பொம்பளைங்க பார்ப்பாங்க...அப்படி இப்படியென நிஜத்தில் உழலும் அத்தனை கழிசடைகளும் இங்கும் கோலோச்சுவதை வெறுக்கிறேன்.

என்னுடைய பதிவுகளை இத்தனை பேர் படிக்கவேண்டுமென எதிர்பார்ப்பதும் அதற்கான உத்திகளில் இறங்குவதெல்லாம் தேவையற்றது என்பது என் தனிக்கருத்து. இது சுதந்திரவெளி....எனக்கு தெரிந்தது தெரியாதது, விரும்பியது விரும்பாதது என என்னுடைய தேடல், பலம், பலவீனம், விகாரம் என அத்தனையும் குவித்துவைக்கும் ஒரு இடம் அவ்வளவே....

இஷ்டமும், பொறுமையும் இருந்தால் மட்டும் படி...இல்லையேல் ஓடிப்போ என்கிற மனப்பாங்குடன் எழுதுவதே சுகம் என தோன்றுகிறது. இத்தனை பேர் பின்னூட்ட வேண்டும்...அந்த வெங்காயங்களும் நான் விரும்புகிற மாதிரித்தான் பின்னூட்டவேண்டும்...அதைத்தான் வெளியிடுவேன் மற்றதெல்லாம் என் மனசுக்குள் சாக்கடையாய் சேர்த்து வைத்துக்கொண்டு சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவனை போட்டுத்தாக்குவேன்....இது எனக்கு தேவையில்லை.

அதற்காக இத்தனை நாள் தெரிந்தவர்களையெல்லாம் தூக்கியெறிந்து போவதிலும் தயக்கம்....எனவே தனியாய் ஒரு பதிவினை துவக்க உத்தேசித்திருக்கிறேன். அது சுதந்திர உலகம், அங்கே யாரும் வரலாம்....அதற்காக வாருங்கள் வந்து ஆதரவு தாருங்கள் என்றெல்லாம் அழைக்க உத்தேசமில்லை.

இஷ்டமிருந்தால் என்னுடைய ப்ரொஃபைலில் இருக்கும் அந்த வலைப்பதிவை தேடிப்பாருங்கள். அந்த பதிவு நிச்சயமாய்.....வயது வநதவர்களுக்கு மட்டுமே....


(இந்த பதிவு தொடர்ந்து தமிழ்மணத்துடன் இங்குள்ள வரையறைகளுடன் தொடர்ந்து இயங்கும்...ஏனெனில் இதுவும் பிடித்திருக்கிறது....)