Sunday, February 11, 2007

மிதக்கும் பாறை..!

சவுதி அரேபியாவில் AL-Hassa பகுதியில் ஒரு பெரிய பாறையொன்று ஏப்ரல் மாதத்தில் ஒருநாள் சுமார் 30 நிமிடங்களுக்கு தரையிலிருந்து 11 செண்டி மீட்டர் உயரத்தில் மிதக்கிறதாம். நம்புற மாதிரியா இருக்கு.... படத்தப் பாருங்க....ம்ம்ம்ம்


ஊர்ல என்ன சொல்றாங்கன்னா...1989ல் ஏப்ரல் மாசம் அதாவது17 வருஷத்துக்கு முன்னால இந்த பாறைக்கு பின்னால ஒரு தீவிரவாதி ஒளிஞ்சிருந்ததாகவும் அவனை போலீசார் என்கவுண்டரில் போட்டுத்தள்ளியதாக கூறுகின்றனர்.

இப்பவும் அந்த பாறையில் ரத்தக்கறைகளை கானலாமெனவும், கல் மேலே உயரும் போது அந்த கறை கறுத்து ஈரமாக இருப்பதாகவும் கூறுகின்றனர். ஊர் மக்கள் அதை அழிக்க முயன்றதாகவும்...அழித்தாலும் அது பின்னர் தோன்றியதாகவும் கூறுகின்றனர்.படத்தினை பெரிதாக்கி பார்க்க உங்கள் எலிக்குட்டியால் படத்தை முத்தமிடவும்(ஹி..ஹி...வேலெண்டைன் டே எஃபெக்ட்).

இது உண்மைதானான்னு விசாரிச்சுச் சொல்லுங்கப்பேய்....

7 Comments:

கேள்வியின் நாயகன் said...

ஆமா... இதை வேடிக்கை பார்ப்பதற்கு ஒரு ஆளையும் காணுமே? மலைக்குப்பின் ஒரு ஆளு நிக்கிறாப் போல படம் எடுத்திருந்தல் நம்பலாமோ?

எனக்கு கேள்வி மட்டும்தான் கேட்கத் தெரியும்.

கேள்வியின் நாயகன்.

பங்காளி... said...

வாங்கப்பூ...

நானும் உங்க கேஸ்தான்...எங்களுக்கும் கேக்க மட்டுந்தான் தெரியும்....ஹி..ஹி..

suvanappiriyan said...

பங்காளி!

சரியான உடான்ஸ். வேறொன்றும் சொல்வதற்க்கில்லை. இதையெல்லாம் நம்பாதீர்கள்.

தருமி said...

பங்ஸ்,
இதென்ன கேள்வி கேட்போர் சங்கமா என்ன? அப்படியே என்னையும் சேத்துக்குங்க...

Swamy Srinivasan aka Kittu Mama said...

I already got this as a forward .
idhu unmayannu dhaan therila aana.
adhu eppadi paarai thaana thookikkum ?

Suvanapriyan solvadhu po idhu konjam Udaans maadhiri dhaan theriyudhu Bangali !

Anonymous said...

இது உடான்சா இருக்கு நிறைய சாத்தியக் கூறு இருக்கு! ஆனா உண்மையா இருந்தா அப்படின்னு யோசிச்சா நிறைய அறிவியல் ஆனந்தம் உள்ள போய் வெளிய வரலாம்! :) ... உதாரணத்துக்கு, நிலத்துக்கு அடியிலருந்து வரும் சூடான வெந்நீர் ஆவி ரொம்ப பவர்ஃபுல்லானது. ஹாட் ஸ்ப்ரிங்ஸ் பாத்திருக்கீங்களான்னு தெரியல - ரொம்ப தூரத்துக்கு தூக்கி அடிக்கும் - பயங்கர பவர் இருக்கும். அது அப்பப்ப தான் வரும் ... பூமிக்குள்ள நடக்கிற அடி தடி கொதி நிலவரங்களால.

அப்படி ஏதோ ஒண்ணு இயற்கையா தூக்கி நிறுத்தலாம் ... வெந்நீர் ஆவிலதான் ட்ரைனே ஓட்டியாச்சே நம்மாளுங்க! :)

நம்ம கிருஷ்ணர் சூரியகிரகணத்தை வச்சு பாரதப் போர்ல கலக்குன மாதிரி தான்! கவித்துவமா யாரோ இயற்கைய நல்ல கருத்துக்கு உபயோகிச்சிருக்காங்க போல!

இது சும்மா நாற்காலியில உக்காந்து கூரையப் பாத்து யோசிச்சது -நிஜம் எதுவா வேணா இருக்கலாம்.

அடியான் said...

வடிகட்டின பொய். பெய்ன்ட் பிரஷ்ஷில் டச் பண்ணப்பட்ட உடான்ஸ் மேட்டர்.
பெரிதுபடுத்திப் பார்த்தால் தெரிய வரும் உண்மை. வேண்டுமென்றால், அதையே, அரைஅடி உயரத்திற்கு ஆக்கி காட்டுகிறேன்