Tuesday, September 25, 2007

பங்காளி விடைபெறுகிறான்.....

நண்பர்களே....

இன்றுடன் இந்த பதிவு கைவிடப்படுகிறது.

பங்காளி என்கிற பெயரில் இனி பின்னூட்டங்கள் வருமாயின் தயை கூர்ந்து அவற்றை நிராகரிக்கவும்.

பதிவுலகில் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி வேறு ஒரு பெயரில் தொடர்வதாக இருக்கிறேன்.அடையாளங்களில் எனக்கு நம்பிக்கையில்லாததாலும் ஒரு குறிப்பிட்ட வட்டத்திற்குள் என்னை இருத்திக் கொள்வதில் ஆர்வமில்லாததாலும் இந்த முடிவு.......

இப்படி எழுதுவது வசதியாக இருக்கிறது, இதனால் எல்லா தளங்களிலும் இலகுவாய் போய்வர இயலுகிறது என நினைக்கிறேன்.

வர்த்தகம் தொடர்பான எனது பிற பதிவுகள் வழமைபோல தொடரும்....

பழைய இரண்டு வருடங்களின் அடையாளங்களை தொலைத்துவிட்டு....

புதிய துவக்கத்தில் சந்திக்கிறேன்.......

அன்பன்

பங்காளி...

கிரிக்கெட் விளையாடலாம் வாங்க....

Game: Cricket Challenge

Game: Beat Indian Cricket Team - Robin Uthappa

Game: Virtual Cricket

Game: Cricket Trivia

Game: Cann Cricket

Game: Magic Cricket

Game: Stickman Flash Cricket

Game: Defend the Ashes

Game: Npower Test Series

Game: Hit The Sign

Sunday, September 23, 2007

சில்க் ஸ்மிதா என்கிற விஜயலட்சுமி

(December 2, 1960 – September 23, 1996)
இன்று பதினோறாவது நினைவு நாள்.....
ஆந்திராவில் ஒர் ஏழைக்குடும்பத்தில் பிறந்து வீட்டுவேலை செய்து கொண்டிருந்த விஜயலட்சுமி, வண்டிசக்கரம் மூலமாய் தமிழ் திரையுலகில் கால்வைத்து தென்னிந்திய திரையுலகை தன் அழகிற்கு அடிமையாக்கிய அந்த தேவதையின் இடத்தினை நிரப்ப இன்றுவரை ஆளில்லை....
தன் உடலை மட்டுமே பார்த்த சமூகம் தன் உள்ளத்தை பார்க்கவில்லையென்கிற ஆதங்கத்தில் வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிட்ட அபலைப்பெண்....


இந்த தினத்தில் அவரை நினைவுகளை போற்றும் ஓர் சாமானிய ரசிகன்...



Thursday, September 20, 2007

இராமாயணம் உண்மையா?...சில குறிப்புகள்-2

இராமாயணம் உண்மையா?...சில குறிப்புகள்

தொடர்ச்சி....

ஆரியல்லாத இந்த நாட்டுப் பழங்குடி மக்கள் ஆரியர்களால் காடுகளுக்குத் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை ராட்சதர்கள், அசுரர்கள் என்றும் ஆரியர்களும், ஆரியப் புரோகிதர்களும் நூல் எழுதி வைத்தார்கள். ஆரியரல்லாதவர்களுக்கு இவர்கள் ஆதியில் இட்ட தஸ்யூக், ஆரிய எதிரி என்ற பெயர்கள்தான் நாளடைவில் பிசாசு, பூதம், ராட்சதன் என்ற பெயர்களாக மாறிவிட்டன.
(சர். வில்லியம் வில்சன்ஹண்டர், கே.சி.எஸ்.அய்., சி.அய்.ஈ., எம்.ஏ., ஆக்ஸன் எல்.எல்.டி எழுதிய இந்திய மக்களின் சரித்திரம் என்னும் நூலின் 41 ஆவது பக்கம்).

இராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும், திராவிடர்களை இழிவு படுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்.
(பண்டிதர் டி. பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்ட மலபார் குவாட்டர்லி ரிவ்யூ என்னும் புத்தகம்).

நம்மைச் சுற்றி நாலு பக்கங்களிலும் தஸ்யூக் கூட்டத்தார் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்களைச் செய்வதில்லை. ஒன்றையும் நம்புவதில்லை; அவர்களுடைய பழக்க வழக்கங்களே வேறாக இருக்கின்றன. ஓ! இந்திரனே, அவர்களைக் கொல்லு; தாசர் வம்சத்தை அழித்துவிடுவாயாக.
(ரிக் வேதம் அதிகாரம் 10 சுலோகம் 22-8).

ஆரியர்களின் ஒழுக்க ஈனமான காரியங்களில் எல்லாம் சிறந்த காரியங்கள் மதுவருந்துவதும் சூதாடுவதுமாகும். ரிக் வேதத்தில் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன.
(ராகோசின் எழுதிய வேதகால இந்தியா என்னும் புத்தகம்).

இந்திய அய்ரோப்பியர்களால், அதாவது, ஆரியர்களால் தோற்கடிக்கப்பட்ட கறுப்பு மனிதர்கள் (திராவிடர்களை) தஸ்யூக்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக் கூடியவர்கள் என்றும் வேத இலக்கியங்களில் கூறப் பட்டிருக்கிறது.
(பால்மாசின் அவர்செல் எழுதிய புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும் என்ற புத்தகத்தின் 19 ஆவது பக்கம்.)

மேற்கு திபெத்தையும், ஆஃப்கானிஸ்தானத்தையும் தாண்டி, முதன் முதல் இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள், சமஸ்கிருதத்தைப் போன்ற ஒரு பாஷையைப் பேசினார்கள். இந்தியாவிற்குள் ஆதியில் நுழைந்த இவ் வெள்ளையர்கள் மக்கள் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், கவிதைகள், மத நம்பிக்கைகள் முதலியவைகளை அப்பாஷையிலேயே எழுதி வைத்துக் கொண்டார்கள்.
(சர் ஹென்றி ஜான்ஸ்ட்டன், ஜி.சி.எம்., ஜி.கே.சி.ஈ., 1937 இல் எழுதிய இந்தியாவில் அன்னியர்கள் என்ற புத்தகத்தின் 19 ஆவது பக்கம்.)

இராமாயணமும், மகாபாரதமும் இந்தோ-ஆரியர் காலத்தையும், அவர்களுடைய வெற்றிகளையும், உள்நாட்டுச் சண்டைகளையும் பற்றிக் கூறுவதாகும் . . . இவைகள் உண்மையென்று நான் நம்பியதேயில்லை. பஞ்சதந்திரம், அராபியன் நைட் முதலிய கற்பனைக் கதைகளைப் போன்றவை என்பதே என் கருத்து.
(பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதியுள்ள டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 76-77).

இராமாயணம் என்பது தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதைக் குறிப்பதாகும்.
(டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 82)

ஆரியர்கள் இந்தியாவுக்குள் நுழைந்ததனால் புதிய பிரச்சினைகள் கிளம்பின. இனத்தாலும், அரசியலாலும், மாறுபாட்ட திராவிடர்கள், ஆரியரால் தோற்கடிக்கப்பட்ட திராவிடர்கள் நீண்ட கால நாகரிகத்துடன் வாழ்ந்து வந்தபடியால், இவர்களை விடத் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கூறிக் கொண்ட ஆரியர்களுக்கும் இவர்களுக்கும் இடையே விரிந்த - பெரிய - பிளவு ஏற்பட்டது.
(டிஸ்கவரி ஆஃப் இந்தியா பக்கம் 62).

இராமாயணம் ஒரு கட்டுக்கதைதான். வால்மீகியின் கற்பனையின் விளைவாகவே இராமாயணம் உண்டாயிற்று.
(திரு. நீலகண்ட சாஸ்திரி).

இராமாயணம் என்ற கற்பனைக் கதையின் அடிப்படை யாதெனில், திராவிடப் பழங்குடி மக்களுக்கும், ஆரியப் படையெடுப்பாளருக்கும் இடையே நடந்த போராட்டமே தவிர வேறல்ல.
(சர். ஃபிரோஸ்கான்நன் (முன்னாள் மேற்கு பஞ்சாப் முதலமைச்சர்) 1941 இல் எழுதிய இந்தியா என்ற புத்தகத்தில் பக்கம் 8).

இவ்வாரியப் பார்ப்பனர், ஏனைய வகுப்பினர் எல்லோரும் ஒன்று சேர்ந்துவிடாதபடி அவர்கட்குள் பல்வேறு சமயப் பிரிவு, சாதிப் பிரிவுகளை உண்டாக்கி, அவ்வொவ்வொரு பிரிவினரும் தத்தம் சமயமே, தத்தம் சாதியே உயர்ந்ததென்று சொல்லி, ஒருவரையொருவர் பகைத்துப் போராட வைத்து, அப்போராட்டத்துக்கு இடமாக இராமன் கதை - கண்ணன் கதை - கந்தன் கதை - விநாயகன் கதை - காளி கதை முதலிய பல்வேறு கட்டுக் கதைகளைத் தமது வடமொழியில் உண்டாக்கி வைத்து, அவற்றை ராமாயணம், பாரதம், பாகவதம், காந்தம் முதலிய புராணங்களாக உயர்த்தி வழங்கி, அவை தம்மை மற்றைய எல்லா வகுப்பினரும் குருட்டு நம்பிக்கையால் விடாப்பிடியாகப் பிடித்துக் கொள்ளும்படிச் செய்து விட்டார்கள்.
(மறைமலையடிகள் அறிவுரைக் கொத்து)

ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்து வந்த சூரன் - இராவணன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே, ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படுவாராயினர்.
(மறைமலையடிகள் வேளாளர் நாகரிகம் பக்கம் 61).

ஆரியர் வாய்ந்த பார்ப்பனர்கள், கடவுள் அதோ, அவருக்கு நேரே வந்து அருள்புரிந்தார்; இதோ, இவருக்கு நேராக அருள்புரிந்தார் என்று பொய்யான புராணக் கதைகள் பலவற்றைக் கட்டி விட்டனர்.
(மறைமலையடிகள் கடவுளுக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா பக்கம் 33-34.)

இராவணன் தேவர்களையும், ரிஷிகளையும் தொல்லைப் படுத்தியதாகக் கூறப்படுகிறது. அசரர் - தேவர் என்ற சொற்கள் இரண்டு விதமான இனத்தாரை - நாட்டாரை குறிப்பிடுவதாகும். ஆரியர்கள் தங்கள் இனத்தை தேவர்கள் என்றும், தங்கள் எதிரிகளை அசுரர்கள் - அரக்கர்கள் என்றும் வர்ணித்தார்கள்.
(திரு ஜே.எம். நல்லுசாமிப் பிள்ளை இராமாயண உள்ளுரை பொருள் என்ற நூலின் முன்னுரையில்)

மத நம்பிக்கை ஒருபுறமிருக்க, இராமாயணக் கதையானது உவமையுரையோ சரித்திரமோ அல்ல; கட்டுக் கதையை அடிப்படையாகக் கொண்ட கவிதையே தான்.
(கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி இந்திய சரித்திரம் முதல் பாகம் பக்கம் 34)

புதிய வரவினராகிய ஆரியர்க்கு அனுகூலராயும், பிரதி கூலராயுமிருந்த திராவிடப் பெருஞ்சாதி வகுப்பினரை ஆரியக் கவி அரக்கர் என்றும், குரங்கினம் என்றும் இறுத்துக் கூறியது, அவர்களுக்குரிய சாதித் துவேஷம், செய்நன்றி கொல்லல் ஆகிய குண தோஷத்தைக் குறிக்குமேயன்றி மற்றொன்னையுங் குறிப்பதன்று.
(வெ.ப.சுப்பிரமணிய முதலியார் 1908 ஆம் ஆண்டில் எழுதிய இராமாயண உள்ளுரைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும் பக்கம் 19)

இராமாயணம் கட்டுக் கதையாயினும், இராவணன் என்ற பாத்திரம் தலை சிறந்தது என்பதில் அய்யமில்லை. திராவிடர்கள் இராவணனை ஓர் இணையற்ற வீரனாகவும், தென்னிந்தியாவின் மீது ஆரியர் படையெடுத்ததைத் துணிவுடன் எதிர்த்து நின்ற பேரரசனாகவும் கருதியிருக்கின்றனர்.
(எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளை 1928 இல் எழுதிய இராவணப் பெரியார் பக்கம் 78).

மகாபாரதத்தில் இருப்பது போலவே, இராமாயணத்திலும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனைகளே. இரண்டிலும் சரித்திர சம்பந்தமானது ஒன்றுமேயில்லை.
(ஆர்.சி. தத், பழைய இந்து நாகரிகம் பக்கம் 138)

அண்ணனைக் காட்டிக் கொடுத்துவிட்டுப் பட்டத்தைப் பெறும் தம்பி பக்தன் என்று சொல்ல முடியுமா? பக்தி என்றும், லோக நியாயம் என்றும் யுக்தி செய்து கொண்டு யாரும் எளிதிலே நாட்டுக்கும், சகோதரர்களுக்கும் துரோகம் செய்யத் துணிந்துவிடலாமே.

விபீஷணனுடைய செயலைப் பக்தியாகக் கொண்டாடும் தேசத்திலே தங்களை அறியாமலே ஆயிரக்கணக்கானவர்கள் தேசத் துரோகிகள் ஆகிவிட்டார்கள்.
(வ.ரா. எழுதிய கோதைத் தீவு பக்கம் 24, 25).

புராணங்களும் - இதிகாசங்களும் மக்களின் மெய் சரித்திரமல்ல. இவை மக்கள் வரலாற்றை அறிவதற்கோ, சரித்திர உண்மைகளை அறிவதற்கோ ஆதாரமாகா. இவை வெறும் மத இலக்கியத் தொகுப்புகளே.
(திரு. முன்ஷி, இந்திய மக்களின் கலாச்சாரமும் - வரலாறும் பக்கம் 8)

Wednesday, September 19, 2007

இராமாயணம் உண்மையா?...சில குறிப்புகள்

இராமாயணத்தைப் பற்றியும், மற்றும் பார்ப்பனர்களின் வேத சாஸ்திர புராணங்களைப் பற்றியும் சரித்திர ஆராய்ச்சியளார்களும், பேரறிஞர்களும் கூறியுள்ள கருத்துகளைத் தொகுத்துக் கீழே தந்திருக்கிறோம்.

தென்னிந்தியாவில் வசித்து வந்த ஆரியரல்லாதவர்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் இராமாயணக் கதையில் எழுதி வைக்கப் பட்டிருக்கிறது
(ரொமேஷ் சந்திர தத்தர் சி.அய்.ஈ., அய்.சி. எஸ்.எழுதிய புராதன இந்தியா- 52 ஆவது பக்கம்)


திராவிடர்கள் தங்கள் மீது படையெடுதது வந்த ஆரியர்களோடு கடும் போர் புரிய வேண்டியிருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலேயே அநேக சுலோகங்களாக இருக்கின்றன.
(டாக்டர் ரொமேஷ் சந்திர மஜூம்தார் எம்.ஏ. வின் பூர்வீக இந்திய சரித்திரமும் நாகரிகமும் 22 ஆவது பக்கம்).

இராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்.
(பி. சிதம்பரம் பிள்ளை எழுதிய, திராவிடரும் ஆரியரும் 24 ஆவது பக்கம்).

இராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். இராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில் உள்ளவர்களை - ஆரியர்களல்லாதவாகளையே குறிப்பதாகும்.
(ரொமேஷ் சந்திர தத்தர் எழுதிய, பண்டைய இந்தியாவின் நாகரிகம் 139-141 ஆவது பக்கம்).

தென் இந்தியாவில் இருந்த மக்களேதான் இராமாயணத்தில் குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
(சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும், கட்டுரைகளும் - இராமாயணம் என்னும் தலைப்பில் 587-589 ஆவது பக்கம்).

ஆரியன் என்கிற பதம் இந்தியாவின் புராதனக் குடி மக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்.
தஸ்யூக்கள் என்பது இந்தியப் புராதனக் குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும்.
(1922 - ஆம் ஆண்டு பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் பழைய இந்தியாவின் சரித்திரம் என்னும் புத்தகத்தில்).


ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும், தஸ்யூக்கள், அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது. ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருந்து கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைக்குக் காரணமாகும்.
(டாக்டர் ராதாகுமுத முக்கர்ஜி எம். ஏ., பிஎச்.டி., எழுதிய இந்து நாகரிகம் என்னும் புத்தகத்தில் 69 ஆவது பக்கம்).


இராமாயணக் கதையின் உட்பொருள் என்னவென்றால் ஆரிய நாகரிகத்திற்கும், ஆரியரல்லாத நாகரிகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான இராமன், இராவணன் ஆகியவர்களால் ) நடத்தப்பட்ட போராட்டமாகும்.
(டாக்டர் ராதாகுமுத முக்கர்ஜி எம். ஏ., பிஎச்.டி., எழுதிய இந்து நாகரிகம் என்னும் புத்தகத்தின் 141 ஆவது பக்கம்).


தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும் இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசப்படும் பாஷை
(சர் ஜேம்ஸ்மர்ரே எழுதிய இங்கிலீஷ் அகராதியின் பக்கம் 67 இல் இருக்கிறது.)


ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து, முடியாமல் போனதால், ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக் கொண்டு, அவர்களது நாகரிகத்தையும் பின்பற்ற வேண்டி வந்தன.
(பண்டர்காரின் கட்டுரைகள் வால்யூம்-3, பக்கம் 10)


தமிழர்கள், ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைத்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்.
(டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார், எம்.ஏ., பிஎச்.டி., அவர்கள் எழுதிய தென்னிந்தியாவும் இந்தியக் கலையும் என்ற புத்தகத்தின் 3 ஆவது பக்கம்)


இராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே நாகரிகம் அடைந்தவர்களாய் இருந்தார்கள்.
(பி.டி.சீனிவாசய்யங்கார் எழுதிய இந்திய சரித்திரம், முதல் பாகம் என்னும் புத்தகத்தின் 10 ஆவது பக்கம்).


திராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால், இந்தப்படி இழிவு படுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரிகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்..
(ஜோஷி சந்தர் டம் எழுதிய இந்தியா அன்றும் இன்றும் என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்).


அசுரர்கள் யார்
ஆரியக் கடவுளாகிய இந்திரனையும் இதரக் கடவுள்களையும் பூசித்தவர்களும் அவர்களைப் பின் பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப் பகை இருந்து கொண்டே இருந்தது.
(ஏ.சி.தாஸ். எம்.ஏ.,பி.எல்., எழுதிய ரிக் வேத காலத்து இந்தியா என்னும் புத்தகத்தில் 151 ஆவது பக்கம்.)


ஆரியர்களால் வெல்லப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களை, தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் - தஸ்யூக்கள் என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில், ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து, ஆதிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி எழுதினார்கள்.
(சி.எஸ். சீனிவாசாச்சாரி, எம்.ஏ., எம்.எஸ்., ராமசாமி அய்யங்கர், எம்.ஏ., ஆகிய சரித்திரப் போதகர்கள் எழுதிய, இந்திய சரித்திரம் - முதல் பாகம் என்னும் புத்தகத்தில் இந்து இந்தியா என்னும் தலைப்பில் 16, 17 ஆவது பக்கங்கள்).


ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து, வட இந்தியாவை அடைந்தார்கள். அங்கு தங்களை விட முன்னேற்றமாக திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரிகங்களைக் கற்றுக் கொண்டார்கள்.
(எச்.ஜி. வெல்ஸ் எழுதிய உலகத்தின் சிறு சரித்திரம் என்னும் புத்தகத்தின் 105 ஆவது பக்கம்).


ஜாதிப் பிரிவுகள் நான்கில், அதாவது பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்.
(நியூ ஏஜ் என்சைக்ளோபீடியா வால்யூம். 2 (1925) பக்கம் 273)


இராமாயணம், மகாபாரதம் எனும் இரண்டு இதிகாசங்களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன.

மகாபாரதம் கங்கைநதி வெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம் தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன.
(முன்பு கல்வி அமைச்சராக இருந்த கனம் சி.ஜே. வர்க்கி எம்.ஏ., எழுதிய இந்திய சரித்திரப் பாகுபாடு என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்).


சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக்கிக் கொண்டு, அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம் போல், எல்லாம் தங்களுக்கு அநுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக் கதைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்த கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்துடன் சாமர்த்தியமாய்ப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தித் தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப் பட்டவைகளாகும்.
(பிரபல சரித்திர ஆசிரியரான ஹென்றி பெரிட்ஜ் என்பவர் 1865 இல் எழுதிய விரிவான இந்திய சரித்திர முதற் பாகம் என்னும் புத்தகத்தின் 15 ஆவது பக்கம்.)


விஷ்ணு என்கிற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது.
(இ.பி.ஹரவெல் 1918 இல் எழுதிய இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்என்னும் புத்தகத்தின் 32 ஆவது பக்கம்.)


பாரத இராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டு மிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிட்டிருப்பதெல்லாம் தென்னிந்தியாவை - திராவிட நாட்டைப் பற்றியே யாகும்.
(ஜி.எச். ராபின்சன், சி.அய்.ஈ. யால் எழுதப்பட்ட இந்தியா என்னும் புத்தகத்தின் 155 ஆவது பக்கம்).



வட இந்தியாவில் இருந்த திராவிடக் கலை, நாகரிகம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப்பட்டு விட்டன. ஆனால், தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்க வில்லை.
(தமிழ்ப் பேராசிரியர் கே.எம். சிவராஜ பிள்ளை, பி.ஏ., எழுதிய பண்டை தமிழர்களின் வரலாறு என்னும் புத்தகத்தின் 4 ஆம் பக்கம்.)


பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண் மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி, தனக்குள்ள ஜாதித் துவேஷத்தால் இராட்சசி என்று எழுதியிருக்கிறான். இராட்சதன் என்கிற பயங்கர புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்.
(நாகேந்திரகோஷ், பி.ஏ.,பி.எல். எழுதிய இந்திய ஆரியரின் இலக்கியமும் கலையும் என்ற புத்தகத்தின் 194 ஆவது பக்கம்).


இராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்கள் என்றும், குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது.
(ஹென்றி ஸ்மித் வில்லியம், எல்.எல்.டி., எழுதிய சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம் வால்யூம் 2 இல், பக்கம் 521).


இந்தியாவின் தென் பாகத்திலுள்ள நாடுகளை நோக்கிப் பிராமணர்கள் வெற்றியோடு வரும்போது ஆந்திர, சேர, சோழ, பாண்டிய ஆகிய நாடுகள் மிக்க நாகரிகமான நிலையில் இருப்பதைக் கண்டார்கள்.
(வின்சென்ட் ஏ. ஸ்மித் ஆக்ஸ்ஃபோர்டு எழுதிய இந்திய சரித்திரம்
14 ஆவது பக்கம்).


இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்.
(இம்பீரியல் இந்தியன் கெஜட் 1909 ஆம் வருடத்திய பதிப்பு வால்யூம் 1 இல் 405 ஆவது பக்கம்.)

நன்றி - 'விடுதலை'

Thursday, September 13, 2007

நியூமராலஜி நிஜமா........!!!

நேற்று காலையில் வண்டியில் போய் கொண்டிருக்கும் போது ரேடியோ மிர்ச்சியில் கேட்ட ஒரு செய்திதான் இந்த பதிவெழுதுவதற்கான காரணம். அதாவது ஒவ்வொரு வாரமும் சென்னையில் குறைந்தது 500 பேர் வரையில் தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்களாம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும் பெருவாரியான காரணம் நியூமராலஜியாம்....

இப்போது நியூமராலஜியுடன்...நேமியாலஜி என்கிறா ஜியும் சேர்ந்துள்ளதால் இத்தனை கூத்தும் நடக்கிறது.வேறு மாதிரியில் சொன்னால் ஒவ்வொரு வாரமும் சென்னையில் குறைந்தது 500 பேர் தங்களின் பெயரை மாற்றிக் கொள்வதால் வாழ்க்கையில் சுபிட்சம் அடைகிறார்கள் என கொள்ளலாம்.

என்ன அபத்தம் இது...... இதை மூடநம்பிக்கை என சொல்வதை விட பேராசை மற்றும் அறியாமையின் உச்சம் என்றே சொல்லலாம்.

வாஸ்து சாஸ்திரம், ஃபெய்ங் ஷீய் மாதிரி நியுமராலஜியும் நிரூபிக்கப் படாத/நிரூபிக்க முடியாத புதிரான அறிவியல் என்பதுதான் என்னுடைய தெளிவு. எனக்கும் நியூமராலஜியில் ஓரளவு பரிச்சயம் உண்டு, அதில் வியக்கவைக்கும் சில ஆச்சர்யங்களும் உண்மைகளும் இருக்கிறது.மற்றபடி பெயரை மாற்றுவதால் மட்டுமே ஒருவனுக்கு சுபிட்சம் வரவழைக்க முடியும் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. அது சாத்தியமும் இல்லை

நியுமராலஜியின் பூர்வீகம் பற்றி நான் படித்த சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறேன்.....

எகிப்தில் வாழ்ந்த(வாழும்) 'Rosicrusians' இன மக்கள் வைத்திருந்ததாக சொல்லப்படும் 'Rose Cross' என்கிற அமைப்பு(நம்ம தமிழ்சங்கம் மாதிரி..) எழுத்துக்களுக்கான சப்த எண் குறித்து ஆராய்ந்தார்களாம்.

இவர்களிடமிருந்து இந்த கலை Hebrews கற்றுக் கொண்டதாக தெரிகிறது.இவர்கள் உறுவாக்கியதே Hebrew Kabala என்கிற முறை...

இவர்களை தொடர்ந்து கிரேக்கர்களும் இந்த கலையை கைகொண்டதாக தெரிகிறது.

நியூமராலஜி குறித்து புத்தகங்களாக நமக்கு கிடைத்திருப்பவை

12ம் நூற்றாண்டில் "மோஸஸ் டி லியான்" என்பவர் எழுதிய "The Book of Formation", "The Book of Splendour"

14ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட "The Book of Thoth"

16ம் நூற்றாண்டில் John Hyden "Holy Guide"

18ம் நூற்றாண்டில் ஜெயின் ஜெர்மைன் எழுதிய Practical Astrology

நியுமராலஜி என்கிற பெயர் Cheiro என்பாரால்தான் முதன் முதலில் பாவிக்கப்பட்டது. இது நடந்தது பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பாதியில்

நியூமராலஜியின் நீட்சியே Tarot எனப்படும் சித்திரங்களை வைத்து பலன் சொல்லும் சோதிடமுறை

சீனர்கள் தங்களுக்கேயுரித்தான தனித் தன்மையுடன் ஒரு வகையான எண் கணிதத்தினை கையாண்டது தெரியவருகிறது. ஆனால் இது அரச குடும்பத்தினர் மட்டுமே பழக்கத்தில் வைத்திருந்தனர். மிக ரகசியமாக காக்கப் பட்டது.

இனி நம்மூருக்கு வருவோம்....

சம்ஸ்கிருதத்தில் "அஷரலஷா" என்கிற நூலில் எழுத்துக்களுக்கான ஒலி அளவும் அதன் பலன்களும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நமது மந்திர சாஸ்திரங்களில் எண்களை வைத்து யந்திரம் எழுதும் முறை இன்றளவும் உள்ளது.

அகத்தியரும்,வராகமிகிரரும் இது பற்றிய குறிப்புகளை தங்களது படைப்புகளில் குறிப்பிட்ட்டுள்ளனர்.

நம்ம திருவள்ளுவர் கூட "எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்"...என ஒரு குறளில் இது குறித்து கூறியிருக்கிறார். 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்பது இன்னொரு பிரபலமான சொற்றொடர்.


நியூமராலஜியின் மகத்துவம் பற்றி மொழி ஆளுமை கொண்ட யாரும் பக்கம் பக்கமாய் எழுதிக் குவிக்க முடியும்...ஆனால் என் வரையில் நியுமராலஜி என்பது 'எழுத்துக்களில் ஒலி அது உருவாக்கும் அதிர்வு அதன் அளவுகோல்...அதை பொருத்தமாக அமைப்பதனால் உருவாகும் ஒத்திசைவு(Harmony)....அதன் பலாபலன்களே நியுமராலஜி

ஒவ்வொரு எழுத்தின் அதிர்வுகளை வைத்து அதனை ஒன்பது கிரகங்களுக்கு இனையாக்கி அதன் தாக்கம் அந்த எழுத்துக்களின் மீது பிற்காலத்தில் திணிக்கப்பட்டிருக்க வேண்டுமென நினைக்கிறேன்.ஒவ்வொரு எண்ணின் ஒலி அதிர்வும் மற்ற ஒலி அதிர்வுடன் ஒத்திசைவும்,ஒவ்வாமையும் கொண்டிருக்கின்றன. இதையே சோதிடர்கள் 3 க்கு 6 பகை என சொல்ல கேட்டிருப்பீர்கள்.தமிழ் இலக்கணத்தில் வரும் மாத்திரை, நேரசை,நிரையசை போன்றவையும் இத்தகைய சூத்திரக் கணக்குகளே.....

நமது உடலானது பல நாடிகளால் ஆனதாக சித்தர்கள் குறிப்பிடுகின்றனர்.நாடிகளை வசப்படுத்தினால் எதுவும் சாத்தியமாகுமாம்.சப்த சலனமாய் உச்சரிக்கும் மந்திர ஒலிகள் இந்த நாடிகளைத் தூண்டி உச்சரிப்பவர் மற்றும் கேட்பவரிடம் சலனத்தை உண்டாக்கும் என்கிறார்கள்.மந்திரங்களை உச்சரிக்கும்போது அந்தந்த பீஜங்களுக்கான உடல் உறுப்பின்மீது சித்தத்தை நிறுத்தி தொடர்ந்து கூற அந்த மந்திரங்களுக்கான பலனை பெறலாமாம்.

மந்திரங்களை தொடர்ந்து உச்சரிப்பதை 'உருவேற்றுதல்' என்பர்.மந்திர சொற்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் உருவேற்றினால் உள்ளம் உறுதி பெற்று தான் சொல்வதும் செய்வதும் சாத்தியமாகும் என்கிற நம்பிக்கை தோன்றுகிறது.

இந்த தத்துவத்தின் அடிப்படையில்தான் நமது எண் கனித வல்லுனர்கள் செயல்படுகின்றனர் என்பது என்னுடைய கணிப்பு......

பெயரை மாற்றுவதால் பலன் இருக்கிறதோ இல்லையோ என் அனுபவத்தில் சில பெயர்கள் அத்தனை சரியில்லை என்பதே என்னுடைய அனுபவம். ஆண்களை பொருத்த வரையில் ரமேஷ், சுரேஷ் என்கிற பெயர் இருப்பவர்களின் வாழ்க்கை ஏமாற்றங்களும், போராட்டங்களும் மிகுந்ததாக இருப்பதை பார்த்திருக்கிறேன். அதே வகையில் பெண்களில் கீதா, சுதா போன்ற பெயர்கள். இது என்னுடைய அனுபவம் மட்டுமே இது பிழையாக கூட இருக்க வாய்ப்புள்ளது.

பதிவு நீளமாகிக் கொண்டிருக்கிறது....உண்மை தமிழன் பார்த்தால் டென்சனாகிவிடுவார் எனவே...

ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கிறேன், இங்கே பேசப்படும் அல்லது புழக்கத்தில் இருக்கும் நியுமராலஜி வெறும் ஆரம்ப நிலை மட்டுமே...அவிழ்க்கப் பட வேண்டியவை நிறையவே இருக்கின்றன.சூட்சும எண்கள் அதன் தாக்கம், எண் இயந்திரம் என பேச எழுத நிறையவே இருக்கின்றன.ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கூட இயந்திரம் எழுத முடியும் அதற்கான முறைகள் சூத்திரங்கள் எல்லாம் இருக்கின்றன......அதையெல்லாம் எழுதப்போனால் ஒரு மெகா தொடராக போய்விடக் கூடிய ஆபத்து(!) இருப்பதால் இந்த அளவில் இந்த பதிவினை முடிக்கிறேன்....

பதிவின் ஸ்வாரஸ்யம் கருதி...அடுத்த பதிவில் சில வலை பதிவர்களின்...வலைப் பெயர்களை பிரித்து மேயலாமென நினைக்கிறேன்....விருப்பம் உள்ளவர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிடாலாம்.....ஹி...ஹி....



--------------------------------------------------------------------------------



விரைவில் பங்காளி வலையுலகில் இருந்து விடை பெற இருக்கிறான்...விவரங்கள் வரும் நாட்களில்.........

Wednesday, September 12, 2007

இதுக்கு பதில் சொல்லுங்கப்பா.....

நண்பர்களே...நான் ஒரு அரை வேக்காட்டு ஆ(நா)த்திகன்.....இரண்டுக்குமான தேடல்களை நேர்மையாகவும் அதே நேரத்தில் உணர்வுகளை காயப்படுத்தாமலும் தேடிக்கொண்டிருப்பவன்.

ஆத்திகரும் சரி...நாத்திகரும் சரி..இதுகாரும் ஒருதலைப்பட்சமாய் தங்கள் கருத்துக்களை வலியுறுத்தி வந்திருக்கின்றனரே தவிர பொதுவாய் ஒரு தளத்தில் தங்களின் கருத்துக்களை முன்வைத்து வாதம் செய்ததாய் தெரியவில்லை.

இன்றைய 'விடுதலை' திரு.அறிவுக்கரசு என்பாரின் ஒரு கட்டுரையினை படிக்க நேர்ந்தது.அதில் அவர் இந்து மதத்தின் சில கடவுளர்களை பற்றி எள்ளலுடன் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து ஆரோக்கியமான கருத்துக்களை வைப்போமே....எனக்கென்னவோ அவரின் எள்ளலில் தெரியும் ஆற்றாமை நியாயமானதாக தெரிகிறது.

இனி...திரு.அறிவுக்கரசுவின் கட்டுரை

சு. அறிவுக்கரசு

வாளை மீன் அமாவாசை

கடவுளைக் கற்பித்தவனை முட்டாள் என்றார் நம் அறிவு ஆசான் தந்தை பெரியார். ஆனால் அந்தத் தத்துவத்தைப் பரப்பியவனை அயோக்கியன் என்று கடுமையாகக் கூறினார். ஏன்? சும்மா வெறும் கற்பனை, கப்சாவான கடவுளுக்கு அப்பேர்ப்பட்ட சக்தி இருக்கிறது, இப்பேர்ப்பட்ட ஆற்றல்கள் உண்டு என்றெல்லாம் புளுகித் தள்ளித் தம் பிழைப்புக்கு வழி தேடிக் கொண்டு விட்டவன் கடவுளைப் பரப்பியவன்; இன்றைக்கும் பரப்புகிறவன். கடவுள் கதை சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டுக் கொண்டிருக்கும் இந்தக் காலக் கட்டத்திலும் கடவுள் பெருமைகளைப் பேசி, எழுதிப் பரப்பிக் கொண்டிருப்பவனை அயோக்கியன் என்பதைக் காட்டிலும் கூடுதல் கடுமை கொண்ட சொல்லால் கூடக் குறிப்பிடலாம் அல்லவா?

பாருங்களேன், கொழுந்தீசுவரன் கோயிலாம்! மன்னார் குடிக்குப் பக்கத்தில் உள்ள கோயிலாம்! எவரையும் காப்பாற்றாது, தன்னையும் காப்பாற்றிக் கொள்ளாது என்பதால் காவலர் ஒருவரையும் நியமித்துள்ளர்கள் இரவில் கடவுளைக் காப்பாற்ற! அந்தக் காவலர் கூட முன்னாள் ராணுவவீரர்! என்ன இருந்து என்ன பண்ண? கும்பலாக வந்தனர், காவலரின் கையை, வாயை, காலைக் கட்டினர். மூச்சு விடமுடியாமல் செய்தனர். வாயையும் மூக்கையும் சேர்த்து ஒட்டினர். அவர் செத்துப்போனார். கோயிலில் இருந்த சாமிகளைக் காணோம், திருடிவிட்டனர் எனச் செய்தி வருகிறது.

திருடப்பட்டுவிட்ட சாமிகளின் பெயர்களை ஏடுகள் வெளியிடுகின்றன. ஒன்றுக்கும் பயன் அற்ற வெறும் பொம்மைகள் - திருடப்பட்டுப் போய்விட்ட பிறகு - என்ன பெயர் இருந்தால்தான் என்ன செய்ய? கையாலாகாத கழிவுகள்தானே!

திருப்பதியில் ஒரு சோதா
உலகிலேயே பெரிய பணக்காரக் கடவுள் ஒன்று திருப்பதியில்! பாலாஜி என்பான், வெங்கடாசலபதி என்பான், வெங்கடேஸ்வரலு என்பான், நிரம்பவும் தமிழ்ப் பற்றுள்ளவர்கள் வேங்கடவன் என்பர்! அவன் கதை என்ன? தினந்தினம் திருப்பதி கோயிலுக்கு தீவிரவாதிகளின் அச்சுறுத்தலாம், ஆயுதத் தாக்குதல் நடக்கலாமாம், இரண்டு மூன்று நாள்களுக்கு முன்பு கூட கார்கள் குண்டு வெடித்துப் பலர் இறந்தனர் என்கிறார்கள். லோகத்தையே ரட்சிப்பவனாயிற்றே, தன்னை, தன் பக்தனை, தன் கோயிலை, தன் ஆஸ்தியைக் காப்பாற்றிக் கொள்ளக் கையாலாதவன்தானே? பின் ஏன் வைரத்தில் அபயஹஸ்தம்? கை தேய்ந்துவிடக்கூடாது என்றுதானே அபய ஹஸ்தத்தை மாட்டி விட்டார்கள்? கை சோர்ந்து போய்விட்டதா? வெங்கடாசலபதி சோதாவாகிவிட்டதா?

மிக முக்கியப் பிரமுகர்கள் தன் கோயிலுக்கு வரவேண்டாம் என்கிறான் பரந்தாமன்! புரட்டாசி மாதம் அவனுக்குப் பிரம்மோற்சவம் நடக்கும் மாதம். குடை தூக்கிக் கொண்டு போவார்கள் பலபேர்! செருப்பு (சடகோபம்) தூக்கிக் கொண்டு போவார்கள் பலபேர்! நாமம் போட்டுக் கொண்டும், உண்டி குலுக்கிக் கொண்டும் பக்தர்கள் திருப்பதிக்குப் போவர்! ஜருகண்டி, ஜருகண்டி எனத் துரத்தினாலும் வாங்கோ, வாங்கோ என்று வரவேற்ற காலம் போய், வராதீங்கோ, வந்துடாதீங்கோ எனத் தடை போடுகிறார்கள் என்றால், என்ன ஆயிற்று பாலாஜி வெங்கடேஸ்வரனுக்கு? ஏழுமலையான் ஏதும் செய்ய ஏலாதவனாகிவிட்டானல்லவா?

நேத்ர தரிசனம் எதற்கு?
இந்த லட்சணத்தில் நேத்ர தரிசனம் என்னத்துக்கு? மூஞ்சி, கண், மூக்கு எல்லாவற்றையும் மறைத்துப் போடப் பட்டிருக்கும் நாமத்தை வாரத்தில் ஒரு நாள் (வியாழன்) மட்டும் சிறிதாகப் போட்டு, வெங்கடவனின் நேத்ரத் தரிசனம் தருகிறார்களாம்! அதைக் காணக் கண்கோடி வேண்டுமாம், கொடுத்து வைத்திருக்க வேண்டுமாம்! சொல்கிறார்கள். மறுபக்கத்தில் காப்பாற்றச் சக்தி கிடையாது, ஆகவே வரவேண்டாம் என்று சொன்னால் என்ன பொருள்? கடவுளின் சக்தி காலாவதி ஆகிவிட்டது என்பதையாவது பகிரங்கமாக ஒத்துக் கொள்ள வேண்டியதுதானே! இதற்கான அறிவு நாணயம் கொஞ்சமும் இல்லாமல், பிரம்மோற்சவம் நடத்தலாமா?

ஏக தந்தாய நமக:விக்னேசுவரன் என்றொரு கடவுளாம். அதற்குப் பிறந்த நாளாம். வெகு விமரிசையாகக் கொண்டாடத் திட்டம் போடுகிறார்கள். இந்தப் பிள்ளையார் இறக்குமதி செய்யப் பட்ட கதையை மாண்புமிகு முதல்வர் மானமிகு கலைஞர் மாமல்லபுரத்தில் விளக்கினார். எந்தப் பக்த திலகமாவது அதற்கு விளக்கம் தெரிவித்ததா? வாயை மூடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் சொன்னதை ஒத்துக் கொள்கிறோம் என்று தானே பொருள்? பின் ஏன் விநாயகன் பொம்மை, பூஜை, ஊர்வலம், விசர்ஜனம் எல்லாம்?

பரசுராமப் பார்ப்பான் போட்ட போட்டில் இதன் ஒரு தந்தம் உடைந்துவிட்ட கதை தெரியுமோ? சிவன் தனி அறையில் இருந்தபோது இந்த ஆனைமுக அழுக்குருண்டைதான் காவல். அவசரமாகச் சிவனைப் பார்க்கப் பரசுராமன் வந்தானாம். காவலுக்கு இருந்தவன் தடுத்தானாம். பரசுராமன் மீறிப்போக முயன்றானாம். ரயில்வே கேட் மூடுவதைப் போல பிள்ளையார் தன் தந்தத்தை நீட்டித் தடுத்தானாம். கோபம் கொண்ட பரசுராமன் தன் வாளால் தந்தத்தை வெட்டிப் போட்டு விட்டு உள்ளே போய்விட்டானாம்! இவனுக்கும் இவன் தந்தத்துக்கும் வந்த விக்னத்தைப் போக்கிக் கொள்ள முடியாதவனுக்குப் பெயர் விக்னேசுவரனாம்.

மீசையில் மண் ஒட்டவில்லை
கணபதியின் கையாலாகாத்தனத்தைக் காட்டிக் கொள்ளாமல் ஒரு கதையைக் கட்டிவிட்டார்கள். பரசுராமன் கைவாள் சிவன் கொடுத்ததாம். தன் தந்தையின் வாள் தன் தந்தத்தை வெட்டியதால், தந்தையின் வாளுக்கும் பங்கம் வந்துவிடக்கூடாது என்று கணபதி விட்டு விட்டானாம். மீசையில் மண்படவில்லை மாடல் புளுகு! இன்னொரு கதையும் நாமக்காரர்கள் கட்டிவிட்டனர். பாரதம் சொல்ல வியாசன் வேகமாக உச்சரித்தானாம், அதே வேகத்தில் மேரு மலையில் எழுத தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கிக் கொண்டான் பிள்ளையார் என்று ஒரு கதை. புளுகுவதைக் கூட ஒரே மாதிரிச் செய்யத் தெரியாக அறிவிலிகள்

புரட்டாசிப் புரட்டுகள்
கடவுள் தத்துவத்தைப் பரப்புபவர்கள் எவ்வளவு அயோக்கியர்கள் என்பதற்கு இதையும் ஆதாரமாகப் படியுங்கள். சக்தி அம்பலப்பட்டு அசிங்கப்பட்ட பிறகும் புரட்டாசி சனிக்கிழமையில் விரதம் இருந்து பெருமாளை வழிபட்டால் எல்லாம் வெற்றிதானாம். வளம் பெருகுமாம். பொருள் கூடுமாம். பொன்னான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளலாமாம்! இவர்களை அயோக்கியர்கள் என்பதா? அதற்கும் மேலே வைத்துக் கூறுவதா?

மகாளய அமாவாசையாம்
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசையாம்! அன்றைக்குத் திதி கொடுத்தால் முன்னேற்றங்கள் வருமாம். திதியை வாங்கிப் போகும் பார்ப்பனர்களுக்கு முன்னேற்றம் வருமே தவிர, கொடுப்பவனுக்கு என்ன வரும்? இருக்கும் கொஞ்சம் புத்தியையும் இழப்பவர்கள்தானே திதி, திவசம் தருகிறார்கள். பெரியார் திரைப்படத்தில் திதி, திவசம் தரும் பித்தலாட்டம் பற்றித் தோலுரித்துக் காட்டிய பிறகும் கூட மகாளய அமாவாசை திதி தாருங்கள் என்கிறார்கள் என்றால் அயோக்கியன் என அழைப்பது தவறா? மறந்தவருக்கு மகாளய அமாவாசையாம்! அதாவது மாதாமாதம் அமாவாசையன்று திதி கொடுக்க மறந்து விட்டவர்கள் மகாளய அமாவாசையில் வருஷத் திதி தந்து விடலாமாம். அடித்துக் கொண்டு போகக் காத்திருக்கும் இவர்களை அயோக்கியன் எனக் கூறக் கூடாதா?

வாளை மீன் அமாவாசை12
வருடத் திதியைத் தருவதற்கு வாய்ப்பு மனு சாத்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது. முள் நிறைந்த வாளை மீனைத் திவசப் பொருளாகக் கொடுத்தால் பித்ருக்கள் 12 வருடப் பலனைப் பெறுவார்களாம்; பசியாறுவார்களாம்! இதைச் செய்யலாமே! மனுசாத்திரப்படி திவசம் வாங்கிக் கொள்ளும் பார்ப்பனரைத் தேடிக் கண்டுபிடியுங்கள்! அவரிடம் திவசப் பொருளை அளித்து 12 ஆண்டுக்கொருமுறை முள்வாளை மீன் அமாவாசையை உருவாக்குவோம்!


கண்ணியமான விவாத நோக்கத்துடனே இந்த பதிவு இடப்படுகிறது...யாருடைய உணர்வுகளை புண்படுத்துவதாக இருந்தால் அதற்காக வருந்துகிறேன்....

Monday, September 10, 2007

காப்பாத்து கடவுளே....

இன்னிக்கு வலை மேய்ந்து கொண்டிருந்த போது சிக்கிய பிரார்த்தனை இது....எல்லாருக்க்கும் யூஸாவும்னு நினைக்கிறேன்...அனைவரும் படித்து ஜென்ம சாபல்யம் அடையுமாறும் வேண்டுகிறேன்....

Daily morning prayer

O God,
Give us strength & capacity to pay-
Income Tax,VAT,CST,service Tax,
Excise Duty,Octroi,TDS,ESI,FBT,
Property Tax,,Stamp Duty,CGT,
Water Tax,Prof Tax,Road Tax,
Educational Cess,Congestion Levy
and many more..
Besides
Dont forget Gunda Hafta,bribes,
Donations,Chanda,Beggers etc....
If we have some time and money left after that,
We will do some business !
Cheers to booming
Indian economy.

Saturday, September 08, 2007

கட்டோடு குழலாட......

காலத்தால் அழியாத காவியப் பாடல்களில் இதுவும் ஒன்று....இந்தப் படம் எப்போது வெளிவந்தது என தெரியவில்லை.....

கொடைக்கானல் தொலைகாட்சி கோபுரத்தின் மூலம் ஹிந்தி நிகழ்சிகளையே கண்டுகொண்டிருந்த தென் தமிழகம் முதல் முறையாக சென்னை தொலைகாட்சி நிலையத்தோடு இனைக்கப்பட்ட நாளில் முதல்முதலில் ஒளிபரப்பான பாடல் இதுதான்...ஏதோ நேற்று நடந்தது போல ஈரமான நினைவுகள்....ம்ம்ம்ம்ம்

படம்: பெரிய இடத்துப் பெண், மக்கள்திலகம் எம்.ஜி.ஆர், மணிமாலா,ஜோதிலட்சுமி...கவியரசரின் அழகுதமிழ், மெல்லிசை மன்னரின் மயக்கும் இசைக்கோர்வை....

முதல் முறையாக இந்த பாடலை கேட்கும் போது இதன் வீச்சும் ஆழமும் தெரியாது....திரும்ப திரும்ப கேட்கும் போதுதான் இந்த பாடலின் மகத்துவம் விளங்கும்....மிகைப் படுத்துதல் இல்லாது கதாபாத்திரங்களின் வாழ்வியலோடு பின்னிப்பினைந்து செல்லும் பாடல்....வெகு சில பாடல்கள் மட்டுமே இத்தனை யதார்த்தமான அழகுடையவை....

தாவணிகள் எல்லாம் ம(ற)றைந்து போய்விட்ட இந்த காலத்தில் தாவணிப் பெண்களின் நளினமும்,ஒயிலும் இனி திரையில் மட்டுமே காணக்கிடைக்கும் அதிசயங்கள்.....கட்டு மஸ்தான கிராமத்து இளைஞனை கண்ணுக்குள் நிறுத்துகிறார் மக்கள் திலகம்.


இனி பாடலை பார்த்து ரசியுங்கள்....

Tuesday, September 04, 2007

கிருஷ்ணர் சில கேள்விகளும் குழப்பங்களும்


இன்றைக்கு கிருஷ்ண ஜெயந்தி....ஆளாளுக்கு கண்ணன் துதிபாடி பதிவிடும் நேரத்தில் கிருஷ்ணர் பற்றிய நானறிந்த சில தகவல்கள் மற்றும் சந்தேகங்களை தொகுக்கவே இந்த பதிவு

கண்ணன் அடிப்படையில் ஒரு தமிழனாகவே/திராவிடனாக இருந்திருக்க வேண்டுமென்பது என்னுடைய அனுமானம் இதனை நிரூபிக்க என்னிடம் போதிய சான்றாவனங்கள் இல்லாவிடினும் நம்முடைய கருப்பண்ண சாமியும் கண்ணனும் ஒருவராக இருக்க வாய்ப்புள்தை அலசும் புத்தகமொன்றை படித்திருக்கிறேன்.....புத்தகத்தின் பெயர் நினைவில்லை

எனது இதே கருத்தினையொட்டி திரு.குமரி மைந்தன் அவர்கள் தனது பதிவொன்றில் கிருஷ்ணரை குறித்து பின்வருமாறு பதிகிறார்....

துவரைக் கோமான் என்பவன் இடைக் கழகத்தவன். கார்க்கி கூறுவது தவறு. துவார் என்றால் கதவு. கபாடம் என்றாலும் கதவு. கபாடபுரம் தான் துவாரகை →துவரை. தெற்கே கடலினுள் அமிழ்ந்த நிலத்துக்குத் துவரையம்பதி என்ற பெயர் உண்டு என்ற மரபு குமரி மாவட்டத்தில் உருவான அகிலத் திரட்டு அம்மானை என்ற நூலில் பதிவாகியுள்ளது. அய்யா ஒளி என்ற இதழில் நான் எழுதியுள்ள “துவரையம்பதி” என்ற கட்டுரை பார்க்க. கபாடபுரம் அழிந்த பின் அங்கிருந்து குசராத்துக் கரையில் குடியேறியவர்கள் தங்கள் நகரத்துக்குத் துவாரகை என்று பெயரிட்டனர்.

மகாபாரதம், மதுரை (மாத்ரா = மா + துறை → மாதுறை → மதுரை)யில் ஆண்ட கண்ணனை சிசுபாலன் என்ற நாக அரசன் துரத்த அவன் துவாரகையில் குடியேறியதாகக் கூறுகிறது. இதைக் குமரிக் கண்டத்தில் நிகழ்ந்த மதுரை → கபாடபுரம் இடப்பெயர்ச்சியை நினைவுகூரும் கதைக் கருவாகக் கொள்ளலாம்.

மகாபாரதம் குமரிக் கண்டத்தில் நடந்த நிகழ்வின் தொன்ம வடிவம். பாம்பைத் தோற்றக்குறியாகக் கொண்ட நூற்றுவர்க்கும் அதாவது நாகர்களுக்கும் இயற்கையில் அதன் எதிரியாகிய பருந்தைக் குலக்குறியாகக் கொண்ட கண்ணணுக்கும் அதாவது யாதவர்களுக்கும் நடந்த போர். அதில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்கிறார் எரிக் வான் டெனிக்கன் (பார்க்க: Charists of Gods). காண்டவனத்தை (கோண்ட்வானா – காண்டவனம்; இன்று இந்தியாவில் கோண்டு எனும் மக்கள் வாழும் பகுதியின் பெயர். கோண்டுவானா நிலம் என்று கண்டப்பெயர்ச்சிக்கு முன் தென் அரைக் கோளத்தில் அனைத்து நிலப்பரப்பும் திரண்டிருந்த நிலைக்கு ஏன் புவியியங்கியலாளர் பெயர் கொடுத்தனர்?) எரித்து அழிக்கப் புறப்பட்ட கண்ணணும் அருச்சுனனும் பயன்படுத்திய படைக்கலன் (அம்பு?) ஏற்படுத்திய விளைவுகளை நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுக்குண்டின் விளைவுகளோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார் அவர். அசுவத்தாமன் வீசிய ஓர் ஆயுதம் கருவிலிருந்த குழந்தைகள் அனைத்தையும் அழித்ததாம்.

நூற்றுவரும் சேரர்களின் முன்னோர் என்று பெருஞ்சோற்று உதியஞ் சேரலாதனை முரிஞ்சியூர் முடி நாகராயர் பாடிய பாடல் மூலம் தெரிய வருகிறது.

அலங்குளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
(புறம் 1:13-16)


இதன் பொருள் ஐவரைப் பகைத்து போர்க்களத்தில் இறந்த நூற்றுவர்க்கும் சேரலாதன் முன்னோர் கடன் ஆற்றினான் என்பதாகும்.

மகாபாரதம் கலுழன் சருக்கத்தில் பாம்புகளுக்கும் பருந்துகளுக்கும் உள்ள பகைமை கூறப்பட்டுள்ளது. காண்டவனத்தைக் கண்ணணும் அருச்சுனனும் தீவைத்ததே நாகங்களை (நாகர்களை)க் கொல்லத்தான்.

போர் முடிந்து அனைவரும் மடிந்து இறுதியில் கண்ணன் உயிரைக் கால் கட்டைவிரலில் தேக்கி அறிதுயிலில் இருந்த போது அசைந்த விரலைக் குருவி எனக் கருதி அம்பெய்து கண்ணனின் சாவுக்குக் காரணமான வேடனின் பெயர் சேரன். அதுவரை நாகமாக இருந்த சேரனின் கொடி இதிலிருந்து தான் வில்லாயிற்றோ?

முரிஞ்சியூர் முடி நாகராயர் ஓர் நாகர் என்பது அவர் பெயரிலிருந்து தெரிகிறது. அவர் இரண்டாம் கழகத்தில் துவரையை ஆண்ட கண்ணனின் பிற்காலத்தவராக இருக்க வேண்டும்.


இந்த கருத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் திரு.கே.டி.சேத்னா என்பார் கிருஷ்ணர் பங்கேற்றதாய் கருதப்படும் மஹாபாரத போரின் காலத்தினை வானியல் தகவல்களை வைத்து கணித்திருக்கிறார். அதாவது கி.மு 3128ல் இந்த போர் நடந்திருக்க வேண்டும் என்கிறார்.

இதை உறுதி செய்யும் வகையில் அகழ்வாய்வில் கிடைத்த ஒரு செப்பு தகடு தரும் செய்தியாவது கி.மு 3012ல் அர்ஜுனனின் பேரனான ஜனமேஜயன் என்பான் துங்கபத்திரை நதிக்கரையில் உள்ள ராமர் கோவில் ஒன்றிற்கு நிலமானியம் வழங்கிதாக கூறுகிறது. இந்த செப்பேடு ஆய்வுக்குட்படுத்தப்பட்டு பின்னர் அதிகாரப்பூர்வமாய்"இந்தியன் ஆண்டிகுவெரி"யில் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதைத் தவிர கிருஷ்ணரில் லீலா விநோதங்கள் எண்ணிலடங்கா...அவற்றை விவரிக்கப் போனால் விரசத்தில் எல்லையை தொடுமென்பதால்...மாதிரிக்கு ஒன்றே ஒன்றை மட்டும் வைக்கிறேன்....அதாவது கண்ணனின் காதலியாக கருதப்படும் ராதை உண்மையில் அவருக்கு அத்தை முறையானவள் என்பதும் மாற்றான் மனைவி என்பதும் நெருடும் தகவல்கள்.


மேலே உள்ளது கிருஷ்ணரின் ஜாதகம் என திரு.அருன் பன்சால் என்பவர் கணித்திருக்கிறார்.அவரின் கணிப்பின் படி கிருஷ்னர் கி.மு.3228 ல் ஜூலை மாதம் 21ம் நாள் பிறந்ததாக கூறுகிறார். இது குறித்த மேலதிக விவரங்கள் இங்கே...

எது எப்படியாகினும் பகவத்கீதை போன்ற காலத்திற்கு நிலைத்து நிற்கும் தத்துவத்தை அளித்துச் சென்ற கிருஷணரை அவர் பிறந்த இந்த நாளில் மாற்றாரோடு இனைந்து நாமும் வாழ்த்துவோம்.....

Monday, September 03, 2007

டோண்டு இனி...

டோண்டு இனி...
மரியாதையாக வீட்டுக்குப் போகலாம்
தமிழ்மணத்தை விட்டு தூக்கலாம்
பதிவர்கள் அனைவரும் புறக்கணிக்கலாம்
பாராட்டு விழா நடத்தி கவுரவிக்கலாம்
வேற வேலைய பாருங்கப்பா...