Tuesday, October 31, 2006

நேதாஜி மறைந்தார்....?


ஜனவரி 23,1897 ல் பிறந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கடந்த மாதம்(அக்டோபர்27,2006) தனது 109 வயதில் மத்திய பிரதேச மாநிலம், அசோக்நகர் மாவட்டத்தில் குணா அருகில் உள்ள சாய்ஜி என்கிற கிராமத்தில் முதுமையின் காரணமாய் இயற்கை எய்தினார்.....

கிறு கிறுன்னு தலை சுத்துதா?....அல்லது பதிவெழுதும் பங்காளியின் மூளைத்திறத்தை பற்றிய சந்தேகம் வருகிறதா?....ஹி..ஹி...ம்ம்ம்...வேறு வழியே இல்லை நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும்....வரும் தகவல்கள் அப்படி....

பல்வேறு மர்மங்கள் சூழ்ந்த நேதாஜியின் வாழ்வில் இன்னொரு மர்மம்தான் இந்த நிகழ்வு...சரி இனி தகவல்களுக்குள் போவோம்....

கடந்த 30 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் வசித்துவரும் 'பாபா லால்ஜி மஹாராஜ்'கடந்த மாதம் 27ம் தேதி தன் மரணத்திற்கு முன்னால் அந்த ஊரின் முன்னாள் தலைவர் திரு.ஜி.எஸ்.ரகுவன்ஷி உட்பட சிலரிடம், தாண்தான் நேதாஜி என அறியப்படும் சுபாஷ் சந்திரபோஸ் எனவும், தனது இறுதிச் சடங்கு முடியும் வரை இத்தகவலை வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது எனக் கூறியதாக சொன்னதே இத்தனை பரபரப்புக்கும் காரணம்.

கடந்த 30 ஆண்டுகளாக இந்த கிராமத்தில் ஆசிரம் ஒன்றை நடத்தி வந்தாலும் அதற்கு முந்தைய இருபது வருடங்களை இந்த ஊரின் பக்கதில் உள்ள 'ச்சக் ச்சிரோலி' என்கிற கிராமத்தில் வாழ்ந்திருக்கிறார். இவரது பூர்வீகம் யாருக்கும் தெரியவில்லை. மக்கள் இவரை யாரென கேட்ட போதெல்லாம்...உண்மையைச் சொன்னால் இந்த இடம் மக்கள் வெள்ளத்தால் நிறையும் என்று கூறியிருக்கிறாரே ஒழிய தன்னைப் பற்றி இறுதி வரை சொன்னதில்லையாம்.

இவரது தலையிலும்,உடலிலும் இருந்த ஆழமான தழும்புகளைப் பற்றிக் கூறும் போது அவை விமானத்தில் இருந்து விழுந்ததால் ஏற்பட்டதென்று கூறியிருக்கிறார். நேதாஜியின் மரணம் பற்றிய பேச்சுக்கள் வரும்போதெல்லாம் அதை திட்டவட்டமாக நிராகரித்திருக்கிறார் இந்த பாபாஜி...சமயங்களில் யாருக்கும் சொல்லாமல் எங்கேயோ சென்று வந்ததாகவும் கூறுகிறார்கள்...அநேகமாக டில்லிக்குப் போயிருக்கலாம் எனச் சொல்கிறார்கள்.

இந்த தகவல்கள் கிளம்பியது போலீசார் பூர்வாங்க விசாரணையை துவக்கியிருப்பதாக மாவட்ட காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.கிடைக்கும் முதற்கட்ட ஆதாரங்களைக் கொண்டு தேவைப்பட்டால் அவரின் உடல் தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதனைகள் செய்யப்படும் என கூறியிருக்கிறார்.அவரது ஆசிரமத்தை சோதனையிட்ட போது புத்தமதம் சம்பந்தமான பழைய புத்தகங்களும், பழைய ரயில் மற்றும் பேருந்து பயனசீட்டுகளும், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றிய பழைய பத்திரிக்கை தகவல்களும் கிடைத்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்....

இந்தியாவின் மாபெரும் தலைவர்களில் ஒருவரும்....அதிரடியான ஒரு மனிதர் இப்படி மறைந்து வாழ்ந்திருப்பாரா?.....அதற்கான அவசியமென்ன?....அரசாங்கம் இதுபற்றி இன்றுவரை அறியாமலிருந்திருக்குமா?....இப்படி நிறைய சந்தேகங்கள்...கேள்விகள்....குழப்பங்கள்.....ம்ம்ம்ம்ம்ம்

Monday, October 30, 2006

FM தேவதைகள்


FM தேவதைகள்

தெற்கில் ஒரு காலத்தில் இலங்கை வானொலி பெரும்பாலானோரின் கவசகுண்டலமாய் இருந்தது.......இன்றைக்கும் நினைத்த மாத்திரத்தில் காதில் ஒலிக்கும் ராஜேஸ்வரி சண்முகம்(இவர் தற்போது திருச்சியில் வசிப்பதாக கேள்வி), K.S.ராஜா, B.H.அப்துல் ஹமீது,மயில்வாகனன் சர்வானந்தாவின் அமரத்துவம் வாய்ந்த குரல்கள்.

இலங்கைப் பிரச்சினைகளினால் தென் தமிழகத்தாருக்கு நேர்ந்த மிகப்பெரிய இழப்பு இலங்கை வானொலி.தொடர்ந்த தொலைக்காட்சியின் வரவால் ஆல் இந்தியா ரேடியோவின் கிளிப்பிள்ளைகள்/ஜெராக்ஸ் காப்பிகளிடமிருந்து தப்பிக்க முடிந்தது. இந்திய வானொலியில் திரு.தென்கச்சி.கோ.சாமிநாதனைத் தவிர சொல்வதற்கு யாருமில்லை என்றே நினைக்கிறேன்.

சென்னையில் தனியார் வானொலிகள் தலையெடுக்கும் வரையில் விவித பாரதியும், FM ரெயின் போவும் ஆலையில்லாத ஊரின் இலுப்பைப் பூ சர்கரையாகவே இருந்தது.இன்றைக்கு சென்னையில் மட்டும் ஏழு வனொலிகள்.....எதைக் கேட்பது எதை விடுப்பது என்று திணறத்தினற வானொலி நிலையங்கள்......விரைவில் குமுதம் ஒரு வானொலிச்சேவையை துவக்க இருப்பதாக தெரிகிறது.

முதலில் காலடி வைத்த சூரியன்FM, ரேடியோ மிர்ச்சி சக்கைபோடு போட்டாலும் சூரியனின் கை ஓங்கியிருந்தது. கீழ்த்தட்டு மற்றும் நடுத்தர வகுப்பினரை குறிவைத்து இவர்களால் தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள்....எளிதில் பிரபலமடைந்தது....வெட்டியாய் காசைச் செலவழிக்கிறோமென்றே கவலையில்லாமல் சென்னைவாசிகள் தொலைபேசியும்,குறுந்தகவல்கள் என புளகாங்கிதமடைந்தனர்.....அன்னியோன்யமாய் பேசுகிறேன் பேர்வழியென பெண் அறிவிப்பாளர்கள் குழைந்து குழைந்து நேயர்களை கிறங்கடித்தனர்.....ஹி..ஹி...நான் கூட இப்ப ரகசிய சிநேகிதியின் குரலால் ஹி..ஹி...

சூரியன்FMல்...ராஜி...சிக்கி....கண்மணி....டோஷிலா,அனுராதா உண்ணி, ப்ரியா போன்ற தேன்குரல் தேவதைகள் இருந்தாலும் ராஜியும் சிக்கியும் ரொம்பவே நெருக்கம்.கண்மணி சமீபத்திய திரைப்பாடலில் சோனியா அகர்வாலுக்காக சிரித்தே அசத்தியிருந்தார்.காதல் காதல் என்கிற அரைவேக்காட்டு நிகழ்ச்சியை நடத்தும் சிக்கியை இன்னும் யாரும் ப்ராக்கட் போடமல் இருபார்களா? என்கிற அரிய சந்தேகம் அவ்வப்போது வருவதுண்டு.

ரேடியோ மிர்ச்சி பக்கம் வந்தால் சுசித்திரா மற்றும் தேவா...தேவா கொஞ்சம் முதிர்ச்சியான தேன் குரல்...ஆரம்பத்தில் நான் சுச்சியின் குரலில் கிறங்கிப் போயிருந்ததென்னவோ
உண்மையென்றாலும்...இப்போதெல்லாம் அவர் பேசினால் தவளை கத்துவது போலத்தான் கேட்கிறது...ஹி..ஹி....இதைப் படித்தால் சுச்சி வருத்தப்படுவார்..ஹி...ஹி...அம்மனி லொடலொடன்னு பேசறத கொஞ்சம் குறைக்கலாம் .....

இந்த வேளையில் வந்ததுதான் ரேடியோசிட்டி....இங்க ஒரு புள்ள இருக்கு....பேரு சொல்லும் போதே அவனவன் கிறுகிறுத்துப் போயிருவான்....வேறொன்னுமில்லை....ச்ச்ச்ச்சோசோசோ ஸ்ஸ்ஸ்வீவீ...ட் ஷாம்லி.....ம்ம்ம்ம்மூமும்ம்ம்ம்மாஆ..ஆஆஆஆ......அநியாயத்துக்கு முத்தமழை....என்னிக்காவது நேர்ல பார்த்தா வாங்கின ஒன்னையாவது திருப்பிக் கொடுக்கனும்னு நினைச்சிருக்கேன்...ஹி...ஹி....இதில் மற்றவர்கள் அவ்வளவாய் சுகமில்லை.....

அண்ணாச்சி வாடை தூக்கலாய் இருக்கும் தினதந்தி குழுமத்தின் ஹலோFM...இதில் நிகழ்ச்சியின் தரம் இன்னமும் Fine Tune செய்யப்படவில்லை.....அதனால் இங்குள்ள தேவதைகள் இந்த பதிவிலிருந்து தப்பிக்கும் அதிர்ஷ்டசாலிகள்.....கூலிக்கு மாரடிப்பவர்களை(ஆல் இந்தியா ரேடியோ) மன்னித்துவிடலாம்......

கடைசியாய்...நம்ம பேவரைட் ரிலையன்ஸ் குழுமத்தின் BigFM....தேர்ந்த திட்டமிட்ட நிகழ்ச்சிகளும் அதை தொகுக்கும் அறிவிப்பாளர்களும்...காலையில் வரும் உமாரியாஸின்(Mrs.கட்டதுரை), செயற்கை பூச்சில்லாத சிநேகமான குரல்....தொலைக்காட்சி சீரியல்களை எரிச்சலூட்டும் நோக்கத்துடனே பேசவைக்கப்படும் இம்சை அரசி......மென்மையாய்...கம்பீரமாய்...நிதானமாய்....ஊடுருவும் குரலுடன்....நம்ம பேவரைட்டான, ரகசிய சிநேகிதியென பேரை சொல்லாமல் அடம்பிடிக்கும் கிருத்திகா!(கண்டு பிடிச்சிட்டோம்ல!)

நிகழ்ச்சியின் தரம் பற்றி யாரும் கேக்கக்கூடாது...ஹி..ஹி...

யாருப்பா அது?...ஆண் அறிவிப்பாளர்கள்...னு குரல் கொடுக்கறது...தடிப்பசங்களப் பத்தி நம்ம பதிவுல என்ன பேச்சு?....ஒன்லி தேவதைகள்...ஹி..ஹி..ம்ம்ம்ம்

Sunday, October 29, 2006

புள்ளிகள்



புள்ளிகளான உன் நினைவுகள்
கரும்புள்ளிகளும் சில உண்டு...
நிறமிழக்கத் துவங்கியிருப்பதை
கவனித்திருப்பாயே....

புதிதாய் புள்ளி வைக்க
யாரும் வரும் முன்னே....
வர்ணங்களோடு வருவாயென்கிற
நம்பிக்கையுடன்...

நாளை ஒரு நாள் மட்டும் காத்திருப்பேன்.....

மனசுல வச்சிக்குங்க....


1. No one can ruin your day without YOUR permission.
2. Most people will be about as happy, as they decide to be.
3. Others can stop you temporarily, but only you can do it permanently.
4. Whatever you are willing to put up with is exactly what you will have.
5. Success stops when you do.
6. When your ship comes in.... Make sure you are willing to unload it.
7. You will never have it all together.
8. Life is a journey...not a destination. Enjoy the trip!
9. The biggest lie on the planet When I get what I want I will be happy.
10. The best way to escape your problem is to solve it.
11. I've learned that ultimately , 'takers' lose and 'givers' win.
12. Life's precious moments don't have value, unless they are shared.
13. If you don't start, it's certain you won't arrive.
14. We often fear the thing we want the most.
15. He or she who laughs......lasts.
16. Yesterday was the deadline for all complaints.
17. Look for opportunities...not guarantees.
18. Life is what's coming....not what was.
19. Success is getting up one more time.
20. Now is the most interesting time of all.
21. When things go wrong.....don't go with them.

Saturday, October 28, 2006

தூ(நே)ரம்




தூரங்கள் மிச்சமிருக்கிறது....

பேசுவதற்கும் நிறையவே இருக்கிறது

கூட வருவீர்கள்தானே!

பழைய கள்தான்... புதிய மொந்தையுடன்

வந்திருக்கிறேன்.....

நேரமில்லை கிளம்புவோமா....

-பங்காளி.