Monday, December 11, 2006

கொஞ்சம் லேட்...அவ்வளவுதான்

கடந்த ஒருவாரமாய் பீட்டாவுக்கு மாறியதாலான பயனை அனுபவித்து, மீண்டு இந்தபதிவு....இந்த ஒரு வாரகாலத்துக்குள் தமிழ்மணத்தில் நிறைய அஜால்குஜால் வேலைகளெல்லாம் நடந்திருக்கிறது...

குமரன் வருத்தமாய் வெளியேறிதும்...விடாதுகருப்பினை வெளியேற்றியதும்....ரவி வெளியேறப்போவதுமாய் நிகழ்வுகள்.....குழாயடிச் சண்டைகள் வெட்கப்படுமளவிற்கு நமது வீரதீரங்கள்....ரசிக்கமுடியவில்லை.

இத்தகைய நிகழ்வுகளுக்கெல்லாம் வித்திட்டு வளர்த்து அதில் குளிர்காய்ந்து பொழுதைப் போக்கிக் கொண்டிருப்பவர் யாரென்பது நேற்று பதிவு போடத்துவங்கிய அனானிவரை அனைவரும் அறிந்த மூத்தவரே!....தற்சமயம் அவர் நேரிடையாக களத்தில் நில்லாது தனது அடியார்கள்(!) மூலமாய் கலகம் விளைவித்துக் கொண்டிருக்கிறாரோ என்பது நியாயமான சந்தேகமே.....

விடாது கருப்பின் பதிவின் காட்டம் அதிகமென்பதை ஒத்துக்கொள்ளவேண்டும். அதற்கு சற்றும் காரம் குறையாத ஹரிஹரனின் பதிவு பற்றி தமிழ்மண நிர்வாகம் அமைதி காப்பது ஏன் என்பதை அவர்கள்தான் தெளிவாக்கவேண்டும்.

அடையாளங்களை தூக்கிப்பிடிக்கும் போதுதான் அவலங்கள் வெளியே வருகின்றன....வலைப்பதிவுகள் அனுபவங்களையும் அதன் பாடங்களையும் வெளிச்சத்தில் வைக்கும் களம்....இதை புரிந்து கொள்ளவேண்டும் பெரியவர்கள்....அல்லது பெருந்தன்மையாய் விலகி நிற்பதே மரியாதை....

0 Comments: